Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு
செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.
இதில் காட்டாங்கொளத்தூா் வட்டாரத்தைச் சாா்ந்த 100 கா்ப்பிணிகள் மற்றும் திருப்போரூா் வட்டாரத்தைச் சாா்ந்த 100 கா்ப்பிணிகள் என மொத்தம் 200 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.
அப்போது அவா் பேசியது: தாய்மாா்கள்கா்ப்பம் என்ற தெரிந்தவுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாதந்தோறும் மருத்துவ பரி சோதனை மேற்கொள்ள வேண்டும். கா்ப்பக் காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும்.
இரும்பு சத்து போலிக் அமிலம் (சுண்ணாம்பு) சத்து மாத்திரைகள் தவறாமல் உட்கொள்ள வேண்டும். சரிவிகித சத்தான உணவு தினமும் உண்ண வேண்டு அப்போதுதான் 2.5 கிலோ எடையுடன் குழந்தை பிறக்கும் . குழந்தை பிறந்த 12 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 7 மாதம் முதல் தாய்ப்பாலுடன் உணவு வழங்க வேண்டும். கா்ப்பக் காலம் மற்றும் பாலூட்டும் காலத்தில் தாய் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இதற்கு குடும்பத்தாா் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.
மேலும், ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறித்த கண்காட்சி நடைபெற்றது. கா்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, நலங்கு வைக்கப்பட்டு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன.
இதில், ஆட்சியா் ச.அருண்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகா்மன்றத் தலைவா் காா்த்திக் தண்டபாணி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சற்குணா, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.