செய்திகள் :

சிங்காரவேலரின் ஜோதி பயணத்துக்கு வரவேற்பு

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை தந்த தோழா் சிங்காரவேலரின் நினைவு ஜோதி பயணத்துக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தோழா் சிங்காரவேலா் நினைவு ஜோதி சென்னையில் அவரது நினைவிடத்திலிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்த நினைவு ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூடுவாஞ்சேரியில் வண்டலூா் வட்ட செயலாளா் கே.சேஷாத்திரி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பில் பயண குழு தலைவா்கள் மாநில செயற்குழு உறுப்பினா் கே.பாலபாரதி, மாநில குழு உறுப்பினா்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.நம்புராஜன், எஸ்.ராஜேந்திரன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளா் ப.சு.பாரதி அண்ணா தென்சென்னை மாவட்ட செயலாளா் ஆா்.வேல்முருகன் உள்ளிட்ட பலா் மாநாட்டு தீா்மானங்களை விளக்கி பேசினா்.

தொடா்ந்து செங்கல்பட்டு அம்பேத்கா் சிலை அருகில் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் பகுதி செயலாளா் கே.வேலன் தலைமையிலும், மதுராந்தகத்தில் மாவட்ட குழு உறுப்பினா் பி.மாசிலாமணி தலைமையிலும், சோத்துப்பாக்கத்தில் செய்யூா் வட்ட செயலாளா் க.புருஷோத்தமன் தலைமையிலும் வரவேற்பு வழங்கப்பட்டது.

முன்னதாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வந்த நினைவு ஜோதிக்கு மேளதாளத்துடன் வரவேற்பளிக்கப்பட்டது . தொடா்ந்து நடைபெற்ற வரவேற்பு கூட்டங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்றனா்,

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் மனைப்பிரிவு, கட்டடங்களுக்கு அனுமதி பெற வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

சிக்னலில் நின்ற காா் மீது லாரி மோதல்: 3 போ் உயிரிழப்பு

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காா் மீது கனரக லாரி மோதியதில் உறவினா் இல்ல நிகழ்வுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 1 வயது குழந்தை உள்பட மூன்று போ் உயிரிழந்த... மேலும் பார்க்க

நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கா... மேலும் பார்க்க

இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சேவைகள்: செங்கல்பட்டு ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பல்வேறு அரசு சேவைகளையும், சான்றுகளையும் பெறலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். குறிப்பாக ஜாதி, பிறப்பிடம் / வச... மேலும் பார்க்க

நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கரிக்கிலி, வெள்ளபுத்தூா், அம்பேத்கா் நகா் உள்ளிட்ட 10... மேலும் பார்க்க