செய்திகள் :

கூடுதல் வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு: நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப்

post image

வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்துத் தெரித்திருக்கிறார்.

வாஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம், டிரம்ப் விதித்திருக்கும் வரிகள் சட்டவிரோதமானது என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருக்கிறது.

எனினும், வரி விதிப்புகளை ரத்து செய்ய மறுத்துவிட்ட நீதிமன்றம், ஃபெடரல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசியிருக்கும் டொனால்ட் டிரம்ப், தீர்ப்பு மிகத் தவறானது, அனைத்து வரிகளும் நடைமுறையில் இருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று, பார்டிசன் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம், நம்முடைய வரி விதிப்புகள் நீக்கப்பட வேண்டும் என்று தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், அவர்களுக்குத் தெரியும், இறுதியில் நாம்தான் வெல்வோம் என்று, என டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சமூகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை, அமெரிக்க வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டுக்கு பேரழிவாக மாறிவிடும். வர்த்தக சமநிலையின்மை மற்றும் நியாயமற்ற வரிகளை தொடர்ந்து நாடு தாங்கிக் கொண்டிருக்க முடியாது, இதர நாடுகள் அமெரிக்காவுக்கு விதிக்கும் வரிகளை நாம் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா அது நண்பர்களாக இருந்தாலும் சரி எதிரிகளாக இருந்தாலும் சரி என்று குறிப்பிட்டுள்ளார்.

தான்னால், உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பு என்பது, வர்த்தகப் போர் என்று குறிப்பிடும் டிரம்ப், இதுதான் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களைக் காக்க மிகச் சிறந்த கருவி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக, பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதித்து வந்தன. ஆனால், இப்போது, அமெரிக்காவை பணக்கார, பலமான, அதிகாரம் கொண்ட நாடாக மாற்ற நான் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது என்றார்.

எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது: இந்தியாவுக்கான உக்ரைன் தூதா்

‘எந்தவொரு பகுதியையும் ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது’ என இந்தியாவுக்கான உக்ரைன் தூதா் ஒலெக்சாண்டா் போலிஷ்சுக் திட்டவட்டமாக தெரிவித்தாா். ரஷியா-உக்ரைன் போா் தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அ... மேலும் பார்க்க

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

யேமனில், ஹவுதி கிளர்ச்சிப்படையின் தலைமையிலான அரசின் பிரதமர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமன் நாட்டில், ஈரானின் ஆதரவைப்பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையின் தலை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி! வெடி வைத்து கரைகள் தகர்ப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாபில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில், மக்கள் தொகை அதிகம் நிரம்பிய பஞ்சாப... மேலும் பார்க்க

உக்ரைன்: ரஷியாவின் தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்றத் தலைவர் பலி!

உக்ரைன் மீதான தாக்குதலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரி பருபி (54) கொல்லப்பட்டார்.தெற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளைக் கொண்டு ர... மேலும் பார்க்க

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

இந்தோனேசியா நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில், அங்குள்ள ஒரு மாகாணத்தின் உள்ளூர் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டதில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவின் நாடாளுமன்ற உறுப்பின... மேலும் பார்க்க

என்ன ஆனது? எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் `டிரம்ப் இஸ் டெட்’ பதிவுகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உயிரிழந்து விட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.அமெரிக்காவின் மிக பிரபலமான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடர் நிஜ வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிரு... மேலும் பார்க்க