செய்திகள் :

"கூட்டணி ஆட்சி அமையும் எனச் பேசியிருக்கிறாரே?" - அமித்ஷா பேச்சிற்கு ஆர்.பி.உதயகுமார் மழுப்பல் பதில்

post image

எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்த நினைத்தாலும் மக்களும், அதிமுக தொண்டர்களும் தெளிவாக உள்ளனர் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அமைதி பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில் அணு குண்டு விழுந்ததைப் போல திமுக ஆட்சி அமைந்துள்ளது. பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஸ்டாலின்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

திமுக ஆட்சியில் இதுவரை 7,000 கொலைகள் நடைபெற்றுள்ளன, 2021 - 26 திமுக ஆட்சிக் காலம் மிக மோசமான ஆட்சிக் காலமாக மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும்.

சோழர்களின் காலம் பொற்காலம் எனச் சொல்வது போல ஸ்டாலின் ஆட்சிக்காலம் வேதனையின் காலமாக அமையும்.

தனி நபர் வளர்ச்சி அடையாத நிலையில் தமிழ்ச் சமுதாயம் வளர்ந்து விட்டது எனச் சொல்வது சுத்தப் பொய். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி முதல் அரக்கோணம் பெண் வரை பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்" என்றவரிடம்,

"மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறியுள்ளாரே?" எனச் செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

அமித்ஷா
அமித்ஷா

"சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு வீட்டுக்குப் போகும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டனர், எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும், எப்படி திசை மாற்றினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் குழப்பமின்றி தெளிவாக உள்ளோம்" என்று அமித்ஷாவின் கருத்துக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கிளம்பிச் சென்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imperfect Show 1.7.2025

* அஜித்தை கண்மூடித்தனமாகத் தாக்கும் பகீர் வீடியோ! காவல்துறையினரின் அத்துமீறல் அம்பலம்!* திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்" - FIR சொல்வது என்ன? * மாநில அரச... மேலும் பார்க்க

"SORRY தான் பதிலா? அலட்சியத்தின் உச்சம்; கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லை" - ஸ்டாலினை சாடும் இபிஎஸ்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" - ஸ்டாலின்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

திருப்புவனம்: "ரொம்ப சாரிமா... நடக்கக் கூடாதது நடந்துவிட்டது" - அஜித்குமார் தாய்க்கு ஸ்டாலின் ஆறுதல்

திருபுவனத்தில் நகை காணாமல் போன புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.காவல்துறையின் இந்த எதேச... மேலும் பார்க்க

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' - அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை ம... மேலும் பார்க்க