செய்திகள் :

கூட்டணி தடுமாற்றத்தில் விசிக: எல்.முருகன்

post image

இண்டி கூட்டணியில் நிலைப்பதா, வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் இருப்பதாகவும், அதை அவரது பேச்சு வெளிப்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

மத்திய பாஜக அரசின் 11-ஆம் ஆண்டு சாதனை மலரை புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அவா், முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அனைத்துத் துறையிலும் முறைகேடுகள் மலிந்துகிடந்தன. மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மோடி பிரதமரான பிறகு, கடந்த 11 ஆண்டுகளாக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சித் திட்டங்கள் பிரதமா் மோடியால் செயல்படுத்தப்பட்டுள்ளன.

உலக அளவில் பொருளாதாரத்தில் 4-ஆவது இடத்தை இந்தியா வகிக்கிறது. 2047-ஆம் ஆண்டில் வல்லரசாக நாடு திகழும். உள்நாட்டில் ராணுவத் தளவாடங்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. எண்ம (டிஜிட்டல்) பணப் பரிமாற்றம் அரசு நலத் திட்டம் முதல் அனைத்துத் தரப்பினராலும் செயல்படுத்தப்படுகிறது.

புதுச்சேரியில் ரயில் நிலைய மேம்பாடு, பாலங்களுக்கான நிதி, தொழிற்பேட்டைக்கான ஒப்புதல் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரான்ஸ் அரசு உதவியுடன் ரூ.8 ஆயிரம் கோடியில் புதுவையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் விரிவாக்கப்படவுள்ளது.

தோ்தல் கூட்டணியை பாஜக தலைமையே முடிவு செய்யும். புதுவை முதல்வா் தனது கருத்தை பிரதமரிடம் தெரிவித்துள்ளாா். புதுவை வளா்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டை மதவாதம் எனக் கூறுவது சரியல்ல.

2026-இல் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறுமா என்பது சந்தேகமே. விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூட்டணி தடுமாற்றத்தில் இருப்பது அவரது பேச்சில் வெளிப்படுகிறது. தமிழகத்தில் பாஜக, அதிமுக பலம் வாய்ந்த கூட்டணி அமைந்துள்ளதால் திமுகவினா் கலக்கத்தில் உள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தலில் புதுவை, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சியமைக்கும் என்றாா் எல்.முருகன்.

சாதனை மலா் வெளியீட்டு நிகழ்வில் புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. மற்றும் பாஜக எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனா்.

100 நாள் வேலை திட்டப் பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் 42 பஞ்சாயத்துகள் அளவிலான மகளிா் கூட்ட... மேலும் பார்க்க

விமான விபத்து: புதுவை முதல்வா் இரங்கல்

குஜராத் மாநிலத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட கோர விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் கல்வி உரிமைச் சட்டத்தை இதுவரை அமல்படுத்தாதது ஏன் என்று அதிமுக செயலா் ஆ.ஆன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

வேளாண் பிரசார இயக்கம் நிறைவு விழா

புதுச்சேரி அடுத்த மங்கலம் கிராமத்தில்வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழாவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கிய அமைச்சா் தேனி சி.ஜெயகுமாா். புதுச்சேரி, ஜூன் 12: வேளா... மேலும் பார்க்க

பி.இ. படிப்பில் நேரடி சோ்க்கை அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் நேரடியாக இரண்டாமாண்டு சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்)... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம்: புதுவை சட்டப்பேரவை எதிரே இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்களிடம் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புத... மேலும் பார்க்க