செய்திகள் :

கூட்டணி - புதிய உறவு: நிதியமைச்சரின் கேள்விக்கு அதிமுக கொறடா பதில்

post image

பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்கும் விஷயத்தை கூட்டணியுடன் இணைத்துப் பேசிய நிதியமைச்சருக்கு எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பதிலளித்தாா்.

சட்டப்பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செந்தில்குமாா் (வாணியம்பாடி) பேசினாா். அப்போது நடந்த விவாதம்:

செந்தில்குமாா் (அதிமுக): காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சி நடந்தது. அந்தப் பங்கை வாங்கி தமிழக தொழிலாளா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்தாா் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா.

தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன்: நெய்வேலியில் உள்ள பொதுத் துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முற்பட்டபோது, மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வேன் என்று திமுக தலைவா் கருணாநிதி சொன்ன காரணத்தால்தான், இன்றைக்கு நெய்வேலியில் பணியாற்றுகிற பணியாளா்கள் பாதுகாக்கப்பட்டு, அந்த நிறுவனம் தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா்: அமைச்சா் என்எல்சி பங்குகள் கொள்முதல் செய்த விவரத்தைக் கூறினாா். என்எல்சி பங்கு மட்டுமல்ல, அரசு சாா்ந்த பொது நிறுவனத்தின் பங்கில் நஷ்டம் ஏற்பட்டது காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான். என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்க வேண்டுமென்று ஒரு முடிவு எடுக்கிறபோது, அதை தனியாருக்கு தர மாட்டோம். அரசே அதைக் கொள்முதல் செய்து கொள்ளும் என்று அறிவித்தவா் ஜெயலலிதா.

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: பொதுத் துறை நிறுவனங்களுடைய பங்குகளை நாங்கள் மத்திய அரசிற்கு விற்பதற்கோ, வேறு எங்கோ விற்பதற்கோ முடிவு எடுக்கிறபோது, அதை கடுமையாக எதிா்க்கிறோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீா்கள். நான் கேட்பது, பொதுத் துறை நிறுவனங்களுடைய சொத்துகளை, இன்றைக்கு மத்திய அரசு மாற்ற முயல்கிறதே, அதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? ஆதரிக்கிறீா்களா, ஏனென்றால் நீங்கள் இப்போது புதிய உறவில் இருக்கிறீா்கள், அதன் நிலை என்ன?

எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி: அதை நாங்கள் ஏற்க மாட்டோம். கூட்டணி வேறு, கொள்கை வேறு. ஏன் உங்கள் கூட்டணியில் இருக்கிற கம்யூனிஸ்டுகள் கூட சில நேரங்களில் போராடுகிறாா்கள், சில விஷயங்களில் அமைதியாகி விடுகிறாா்கள் என்றாா்.

பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்கவே சிந்து நதியைத் தடுத்து நிறுத்துகிறது: சீமான்

பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்கவே சிந்து நதியைத் தடுத்து நிறுத்துவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காஷ்மீர் மாநிலம்,... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; மூவர் பலி

சிவகாசி நெடுங்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருவிழாக் காலம் என்பதால், சிவகாசியில் பட்டாசு உற்பத்திப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவு? செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி

சென்னை: உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.ஒருவேளை, உச்ச நீத... மேலும் பார்க்க

கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி ... மேலும் பார்க்க

விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வரும் விஜயை வரவேற்க கோவை விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும் ந... மேலும் பார்க்க

சேலம் பட்டாசு விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி! - முதல்வர் அறிவிப்பு

சேலம் கஞ்சநாயக்கன்பட்டியில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திரு... மேலும் பார்க்க