செய்திகள் :

'கூட்டணி வேறு... கொள்கை வேறு; வக்பு சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளோம்' - வேலுமணி

post image

கோவை அதிமுக சார்பில் நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமண கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வின் பெயரால் திமுக அரசு மக்களை ஏமாற்றியதால் 22 மாணவ - மாணவிகள் உயிரிழந்தார்கள்.

வேலுமணி

மக்களை ஏமாற்றுவதற்கு திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் இருக்கும்போது, திமுகவின் காந்திராஜன் கல்வி அமைச்சராக இருக்கும் போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

மக்களை ஏமாற்ற முடியாது

அப்போது நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. திமுக அமைச்சர் பொன்முடி பெண்களை மிகவும்  இழிவாக பேசியதற்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பல இடங்களிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வை காண்பித்து மத்திய அரசு மீது பழியைபோட்டு, திமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் 7.5% சதவிகிதம் மருத்துவ இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் இன்று ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள்.

 நீட் ரகசியம்?

தமிழகத்தில் திமுக நீட் ரகசியம் இருப்பதாக சொல்லி, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் என்றும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினர். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. இப்போது இருப்பது தேர்தலுக்கான கூட்டணி. வக்பு சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளோம்.

வக்பு வாரியம்

சட்டமன்றத்தில் கொண்டு வந்த வக்புக்கு எதிரான தீர்மானத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் 200  தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்.” என்றார்.

'காங்கிரஸின் உறுதி பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது' - டி.ஆர் பாலு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒன்றிய பா.ஜ.க. அரச... மேலும் பார்க்க

'அதிமுக போராட்டத்திற்கு கண்ணீர் அஞ்சலி' - சீமான் பதில்

அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்..."அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி ... மேலும் பார்க்க

'கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கத்தி கொண்டு வருகிறார்கள்' - தமிழிசை

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியதாவது..."தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இன்று திருச... மேலும் பார்க்க

"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. இந்த நிலையில், கூட்டணி குறித்து... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட... மேலும் பார்க்க

மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன?

மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை வைக... மேலும் பார்க்க