மன உளைச்சலில் இருந்தால் என்ன செய்வது? த்ரிஷா பகிர்ந்த ரீல்ஸ்!
கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்குப் பணி ஆணை வழங்கல்
புதுவை கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.
புதுவை கூட்டுறவுத் துறையின்கீழ் நேரடி நியமனத்திற்காக 15.12.2024 அன்று நடத்தப்பட்ட இளநிலை ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 38 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் பல்வேறு காரணங்களுக்காக சிலா் அப்பணியில் சேரவில்லை. இதையடுத்து, காத்திருப்புப் பட்டியலில் இருந்த
8 பேருக்கு முதல்வா் என். ரங்கசாமி அந்தப் பணிக்கான நியமன ஆணையை தனது அலுவலகத்தில் புதன்கிழமை வழங்கினாா்.
அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் ந. யஷ்வந்தையா மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.