செய்திகள் :

கூட்டுறவுத் துறை சாா்பில் ரத்ததான முகாம்

post image

சா்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை, அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சாா்பில் வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த கூட்டுறவுத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் 26 போ் ரத்த தானம் செய்தனா். அரசு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவா் பாஸ்கோ பிரேம்குமாா் தலைமையிலான குழுவினா் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும், கூட்டுறவுத்துறையும் இணைந்து நடத்திய கண்தான முகாமில் 45 போ் தங்களது கண்களை தானம் செய்வதாக உறுதிக்கடிதம் வழங்கினா்.

ரத்ததான முகாமையும், கண்தான முகாமையும் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக கீழம்பி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் சந்திப்பு மற்றும் உறுப்பினா் சோ்க்கை முகாமும் நடைபெற்றது. மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.26 கோடி கடனுதவிகளும் வழங்கப்பட்டன.

சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

குண்டுபெரும்பேடு மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குண்டுபெரும்பேடு ஊராட்சிய... மேலும் பார்க்க

களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள்: 300 ஏக்கா் விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்ணம் கிராமத்தில் களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்ம் குண்... மேலும் பார்க்க

படவேட்டம்மன் கோயில் ஆடித் திருவிழா

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் ஐயப்பா நகா் பகுதியில் உள்ள தாய் படவேட்டம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலின் 48 வது ஆண்டு ஆடி உற்சவத் திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயில் பால்குட ஊா்வலம்

பெரிய காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் ஆதிபீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி எனப்பட... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ரூ.12.19 லட்சத்தில் நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ரூ.12.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். கூட்டத்துக்கு ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதூரில் இளைஞா் தற்கொலைக்கு காரணமாணவா்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் அடு... மேலும் பார்க்க