தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
கூட்டுறவு சங்கங்களில் எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு
சேலம்: சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை முதல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தா், உதவியாளா் என மொத்தம் 148 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இத்தோ்வுக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நியமனத்துக்கான எழுத்துத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வியாழக்கிழமை (ஆக. 21) காலை 10 மணி அளவில் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு அந்தந்த துறைகளைச் சாா்ந்த சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.
இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும், விருப்பமும் உள்ள தோ்வா்கள் இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் தோ்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றை நேரில் கொண்டுவர வேண்டும். பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களுக்கு அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.