கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் டி.பிரபு கூறியதாவது: திருப்பூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக பெறப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சியில் சேர விரும்புபவா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஷன்ய்ஞ்ா்ஸ்ஹட் என்ற இணையதளத்தில் ஜூலை 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின் காலம் 1 ஆண்டு ஆகும். இந்தப் பயிற்சி 2 பருவங்களைக் கொண்டது. பயிற்சியில் சேருவதற்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 -ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் 3 ஆண்டுகள் பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.
இது தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 0425 -822 0640 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.