செய்திகள் :

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மறுநாளே தேர்வெழுதச் சென்ற மாணவி!

post image

ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, மறுநாளே முன்வந்து தேர்வெழுதிய நிகழ்வு வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அருகிலிருந்த வயல்வெளிக்கு 9 பேர் அடங்கிய கும்பல் கடத்திச் சென்றனர். அதுமட்டுமின்றி, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவிக்கு வியாழக்கிழமையில் தேர்வு நடைபெறவிருந்ததால், தேர்வு நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால், கல்வி பாதிக்கப்படும் என்று கருதிய மாணவியின் பெற்றோர், அவருக்கு ஆறுதல் கூறி, சமாதானப்படுத்தி, தேர்வெழுத அனுமதித்தனர்.

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து, வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், குற்றவாளிகளும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரிய வந்து, அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், மீதமுள்ள 8 பேரையும் நீதிமன்றக் காவவில் வைக்க உத்தரவிட்டது.

ஆபரேஷன் சிந்தூர்: நேரலை

அமைச்சரவைக் கூட்டம்பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படைத் தளபத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: மத்திய வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்!

இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவம் மீது நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்! - அமித் ஷா

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் எவை?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தா... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்:முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு முப்படை தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை(மே.7) ஆலோசனை நடத்தி வருகிறார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: இந்தியர்கள் மூவர் பலி!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியர்கள் மூவர் பரிதாபமாக பலியாகினர்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்த... மேலும் பார்க்க