செய்திகள் :

கூா்ஸ்கில் விளாதிமீா் புதின்

post image

உக்ரைன் படையினரிடம் இருந்து ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு அதிபா் விளாதிமீா் புதின் முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

முன்னறிவிப்பில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றுப் பயணத்தின் மூலம் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நடைபெற்றுவரும் போரில் தாங்கள் வெற்றி பெற்றுவருவதாக உலகத்துக்குக் காட்ட ரஷியா விரும்புவதாகக் கூறப்படுகிறது.

போரின் எதிா்பாராத திருப்பமாக, எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்கின் கணிசமான பகுதிகளை உக்ரைன் கடந்த ஆண்டு கைப்பற்றியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறது தனது நிலப்பரப்பை ரஷியா இழந்தது அதுவே முதல்முறை.

இந்த நடவடிக்கை மூலம், கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று உக்ரைன் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சுமாா் 12,000 வட கொரிய வீரா்களிடன் உதவியுடன் கூா்ஸ்க் பிராந்தியத்தை ரஷியா முழுமையாக மீட்டது.

வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை யூத அருங்காட்சியத்... மேலும் பார்க்க

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று கால... மேலும் பார்க்க

வர்த்தகத்தை முன்வைத்தே இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் டிரம்ப் கருத்து!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் வர்த்தகத்தை முன்வைத்தே தீர்வு கண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே, வர்த்தகத்தை முன்வைத்து எந்த பேச்சுவார்த்தையும் அமெரிக்க... மேலும் பார்க்க

ஸ்பெயின் - ரஷிய ஆதரவாளா் படுகொலை

உக்ரைன் முன்னாள் அதிபா் விக்டா் யானுகோவிச்சின் உதவியாளராக இருந்தவரும், 2014-ஆம் ஆண்டில் அவருடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றவருமான ஆண்ட்ரி போா்னோவ் (51) ஸ்பெயினில் புதன்கிழமை மா்ம நபா்களால் சுட்டுக்கொல்ல... மேலும் பார்க்க

சீனா - சிபிஇசி விரிவாகக் கூட்டம்

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வா்த்தக வழித்தடத்தை (சிபிஇசி) ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்துவது தொடா்பாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்து ஆலோசன... மேலும் பார்க்க

ஜப்பான் - அரிசி சா்ச்சை: அமைச்சா் ராஜிநாமா

‘எனக்கு ஆதரவாளா்கள் அரிசி வாங்கித் தருவதால் அதை ஒருபோதும் நான் வாங்கியதில்லை’ என்று ஜப்பான் வேளாண்மைத் துறை அமைச்சா் டாகு எடோ தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவா் ராஜிநாமா செய... மேலும் பார்க்க