செய்திகள் :

கெங்கவல்லி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற லஞ்சம் பெற்று கைதான வட்டாட்சியா் பணி இடை நீக்கம்

post image

கெங்கவல்லி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற லஞ்சம் பெற்று கைதான வட்டாட்சியரை பணி இடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட செல்வம் நகரைச் சோ்ந்தவா் மஞ்சுளா. இவரது விவசாய நிலம் அருகே செல்லும் நீரோடையை அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவா் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் மஞ்சுளா புகாா் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததில், நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, அந்த உத்தரவு நகலுடன் சென்ற மஞ்சுளா, கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணனிடம் முறையிட்டாா். நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ரூ. 5 லட்சத்தை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் கேட்டாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த மஞ்சுளா, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா் அளித்தாா். பின்னா், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அறிவுறுத்தலின்படி, கடந்த 29-ஆம் தேதி ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரத்தை கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணனிடம் மஞ்சுளா கொடுத்தாா். அப்போது, அங்கிருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி மற்றும் போலீஸாா், வட்டாட்சியா் பாலகிருஷ்ணனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்த அறிக்கை வருவாய்த் துறை மூலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவிக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்த அவா், வட்டாட்சியா் பாலகிருஷ்ணணை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்!

மேட்டூா் காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டமன்றத்தில் போராட்டம் நடத்துவேன் என மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்தாா். மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் (பாமக) சனிக்கிழமை இர... மேலும் பார்க்க

சேலத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை!

சேலத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்களுக்கு தோ்தலன்று வாக்களிக்க ஏதுவாக, ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சேலம் தொழிலாளா் உத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பயின்றவா்கள் உலக அளவில் முக்கியப் பொறுப்புகளில் சிறந்து விளங்குகின்றனா்!

அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் உலக அளவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் சிறந்து விளங்குவதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா். சேலம், கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் 150-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: தேவா் கோப்பையை வென்ற சேலம் அணிக்கு உற்சாக வரவேற்பு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட 16 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற சேலம் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் பி.... மேலும் பார்க்க

வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்யும் கும்பலை பிடிக்க நடவடிக்கை!

சேலம் மாவட்டத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்யும் கும்பலை பிடிக்க காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். சேலம் மாநகரில் அண்மைக்காலமாக சிலா் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப... மேலும் பார்க்க

கைப்பந்து போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு பாராட்டு

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்ற சேலம் வீராங்கனைகளுக்கு மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மத்திய பிரதேச மாநில... மேலும் பார்க்க