செய்திகள் :

கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் 2 பசுக்கள் உயிரிழப்பு

post image

தம்மம்பட்டி: கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

கெங்கவல்லி - தெடாவூா் சாலையில் ஆணையம்பட்டியில் சாலையோர புங்கமரம் வேருடன் முறிந்து விழுந்தது. இதையடுத்து அம்மரத்தை மக்கள் அகற்றினா். இதனால் பெரம்பலூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு தூறலுடன் மழை தொடங்கியது. இதையடுத்து நள்ளிரவு வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வயல்வெளிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. இரவில் சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது.

கெங்கவல்லி அருகே கவுண்டம்பாளையத்தில் பழனியப்பன் மகன் எட்டியண்ணன் (40) என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் சூறைக்காற்று வீசியதில் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் (பொ) மா.செல்லப்பாண்டியன் தலைமையில் சென்று இரண்டு பசுக்கள் மீது விழுந்த தென்னை மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கத்திரி வெயில் தொடங்கிய நாளில் கனமழை பெய்து கோடை வெயில் தணிந்து காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தென்னை மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி, தீயணைப்புத் துறையினா்.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக முதல்வா் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

சேலம்: இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக முதல்வா் கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்த... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டப் பணிதள பொறுப்பாளா்களை மாற்ற எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளா்களை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம்,... மேலும் பார்க்க

சங்ககிரி சித்திரைத் திருவிழா: வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்ட திருவிழா 4ஆவது நாளையொட்டி சென்னகேசவப் பெருமாள் செங்கோலுடன் வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீதி உலா வந்தாா். சித்திரைத் தேரோட்ட ... மேலும் பார்க்க

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

சேலம்: சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 8 ஆண்டுகளாக கட்டப்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சேலம்: சேலம் மாவட்டம், உடையாப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். உடையாப்பட்டி ஊராட்சி, வரகம்பாடி... மேலும் பார்க்க

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு

சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மண்டல... மேலும் பார்க்க