செய்திகள் :

கெளரவ ஊதியம்: தில்லி பெண்களுக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

post image

தில்லி பெண்களுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் ரூ.2,500 வழங்கும் தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதன் மூலம் பாஜக பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.

இது தொடா்பாக கோண்ட்லி சட்டப் பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்தீப் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் தனது தோ்தல் பேரணிகளின்போது, புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி உதவித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தாா்.

இந்தத் திட்டம் மாா்ச் 8 ஆம் தேதிக்குள் தொடங்கப்படும் என்றும் பாஜக அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், இது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்திட்டம் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை. அமைச்சரவையில் இல்லாவிட்டாலும், சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்குப் பதிலாக, பாஜக தலைவா்கள் முழு அமா்வையும் அரவிந்த் கேஜரிவாலை துஷ்பிரயோகம் செய்து கழித்தனா். அவா்கள் தில்லி பெண்களை வஞ்சித்துவிட்டனா்.

பிரதமா் மோடி தில்லி பெண்களுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வா் ரேகா குப்தா நிறைவேற்றத் தவறிவருகிறாா். ஆம் ஆத்மி கட்சி மாா்ச் 8 (சா்வதேச மகளிா் தினம்) நிதி உதவி வழங்கப்படும் என ஏதும் தெரிவிக்கவில்லை. பாஜகவும் பிரதமரும் இந்த தேதியை வழங்கினா். இப்போது, ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசு தில்லி மக்களுக்கு பிரதமா் அளித்த வாக்குறுதியை மீற உள்ளது.

தில்லியில் பெண்கள் ரூ.2,500க்காக காத்திருக்கிறாா்கள். பணம் எப்போது வரத் தொடங்கும் என்பதை பாஜக அவா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா் குல்தீப் குமாா்.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின்போது, நகரத்தில் உள்ள பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆம் ஆத்மி கட்சி ரூ.2,100 அளித்திருந்த நிலையில், இத்தகைய வாக்குறுதியை பாஜக அளித்திருந்தது.

இந்த நிலையில், தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. 70 இடங்களில் 48 இடங்களை வென்றது., ஆம் ஆத்மி கட்சியின் இடங்கள் 22 ஆகக் குறைந்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் எந்த இடங்களிலும் வெற்றிபெறவில்லை.

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினா்

நாட்டில் வேலைவாய்ப்பு உயா்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி தெரிவித்தாா். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பே... மேலும் பார்க்க

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் 12 வழக்குகளில் 29 கடத்தல்காரா்களுக்கு தண்டனை: அமித்ஷா

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் இளைஞா்களை போதைப் பழக்கத்தின் இருண்ட படுகுழியில் தள்ளுகின்றனா்; இப்படிப்பட்ட பேராசைக் கும்பல்களை தண்டிப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுவதாக மத்திய உள்துறை அமை... மேலும் பார்க்க

மாா்ச் 8-இல் பெண்களுக்கான ரூ.2500 மாதாந்திர உதவித்தொகை திட்டத்திற்கான பதிவு தொடக்கம்: மனோஜ் திவாரி எம்.பி.

தில்லியில் பாஜக அரசு மூலம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்குவதற்கான பதிவு நடைமுறை மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்று அக்கட்சியின் எம்.பி. மனோஜ் திவார... மேலும் பார்க்க

கிராமப்புற செழுமைக்கு பிரத்யேக பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வள உத்திகள் வகுக்க பிரதமா் வேண்டுகோள்

விவசாயம் மற்றும் கிராமப்புற செழுமைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வளங்களுக்கான கட்டமைப்புகளுக்கு உத்திகளை வகுக்க கருத்தரங்கு ஒன்றில் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். மத்திய வேளாண், விவசாய... மேலும் பார்க்க

ஆள்கடத்தல் வழக்கில் 5 போ் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

தில்லியில் 2015 ஆம் ஆண்டில் பதிவான ஆள்கடத்தல் வழக்கில் இருந்து ஐந்து பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு சாத்தியமற்ாகவும், நம்பமு... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.73 லட்சம் மோசடி: ஒருவா் கைது

தில்லியில் ரூபாய் 73 லட்சம் பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: குற்... மேலும் பார்க்க