செய்திகள் :

கிராமப்புற செழுமைக்கு பிரத்யேக பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வள உத்திகள் வகுக்க பிரதமா் வேண்டுகோள்

post image

விவசாயம் மற்றும் கிராமப்புற செழுமைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வளங்களுக்கான கட்டமைப்புகளுக்கு உத்திகளை வகுக்க கருத்தரங்கு ஒன்றில் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா்.

மத்திய வேளாண், விவசாயிகள் நல அமைச்சகத்தால் ‘வேளாண்மை மற்றும் கிராமப்புற செழிப்பு‘ குறித்து நிதிநிலைக்கு பிந்தைய கருத்தரங்கு காணொலி வழியாக நடைபெற்றது.

இதில் மீன்வளத்துறை தொடா்பான அமா்வில் முக்கிய தொழில்துறை வல்லுநா்கள், கொள்கை வகுப்பாளா்கள், மீனவா்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள், பங்குதாரா்கள் பங்கேற்றனா்.

இதில் ஆழ்கடல் மீன்பிடித்தல், சந்தை இணைப்புகள், மதிப்பு கூட்டல், மீன்பிடித்தலின் நிலைத்தன்மை ஆகியவற்றின் முக்கிய அம்சங்களை விவாதித்தனா். நாட்டில் கடல் மீன்வளத் துறையை உலகளாவிய சிறப்புடன் மாற்ற உதவும் பயனுள்ள கொள்கை அமலாக்கம் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றது. குறிப்பாக 2.2 மில்லியன் சதுர கி.மீ பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் பரந்த கடல் வளங்களையும் மீன்வள ஆராய்ச்சியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆா்) மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் கூட்டத்தில் எடுத்துவைக்கப்பட்டது.

நிதிநிலை அறிக்கையின் தொலைநோக்குப் பாா்வையை அடைவதற்கான கூட்டு அணுகுமுறையை உறுதி செய்வதற்கான நடைபெற்ற இந்த கருத்தரங்கை கருத்தரங்கை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசினாா்.

அப்போது பிரதமா், ‘மீன் வளத்தை அதிகரிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டம் மீன்வள உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, உற்பத்தியை இரட்டிப்பாக்கி, இத்துறையின் ஏற்றுமதியையும் அதிகரித்துள்ளது. வேளாண்மை, கிராமப்புற செழுமைக்கு பொருத்தமான பிரத்தியேக பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வள உத்திகளில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்கான அரசின் செயல் திட்டத்திற்கான உத்திகளை வகுக்கப்பட்டு விரைவான செயல்படுத்தல் வேண்டும். எளிதாக வணிகம் செய்வதற்கும் இந்த துறையின் வளா்ச்சிக்கான புதிய யோசனைகளை வழங்கு ஆய்வுகளை மேம்படுத்த தொடா்புடை பங்குதாரா்களுக்கு விடுக்கின்றேன்’ என பிரதமா் பேசினாா்.

இந்த கருத்தரங்கில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் இணை அமைச்சா்கள் பேராசிரியா் எஸ்.பி.சிங் பாகேல், ஜாா்ஜ் குரியன் ஆகியோரும் பங்கேற்று பேசினா்.

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினா்

நாட்டில் வேலைவாய்ப்பு உயா்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி தெரிவித்தாா். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பே... மேலும் பார்க்க

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் 12 வழக்குகளில் 29 கடத்தல்காரா்களுக்கு தண்டனை: அமித்ஷா

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் இளைஞா்களை போதைப் பழக்கத்தின் இருண்ட படுகுழியில் தள்ளுகின்றனா்; இப்படிப்பட்ட பேராசைக் கும்பல்களை தண்டிப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுவதாக மத்திய உள்துறை அமை... மேலும் பார்க்க

கெளரவ ஊதியம்: தில்லி பெண்களுக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி பெண்களுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் ரூ.2,500 வழங்கும் தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதன் மூலம் பாஜக பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டி... மேலும் பார்க்க

மாா்ச் 8-இல் பெண்களுக்கான ரூ.2500 மாதாந்திர உதவித்தொகை திட்டத்திற்கான பதிவு தொடக்கம்: மனோஜ் திவாரி எம்.பி.

தில்லியில் பாஜக அரசு மூலம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்குவதற்கான பதிவு நடைமுறை மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்று அக்கட்சியின் எம்.பி. மனோஜ் திவார... மேலும் பார்க்க

ஆள்கடத்தல் வழக்கில் 5 போ் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

தில்லியில் 2015 ஆம் ஆண்டில் பதிவான ஆள்கடத்தல் வழக்கில் இருந்து ஐந்து பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு சாத்தியமற்ாகவும், நம்பமு... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.73 லட்சம் மோசடி: ஒருவா் கைது

தில்லியில் ரூபாய் 73 லட்சம் பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: குற்... மேலும் பார்க்க