கெளரவ ஊதியம்: தில்லி பெண்களுக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தில்லி பெண்களுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் ரூ.2,500 வழங்கும் தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதன் மூலம் பாஜக பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.
இது தொடா்பாக கோண்ட்லி சட்டப் பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்தீப் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியில் தனது தோ்தல் பேரணிகளின்போது, புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி உதவித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தாா்.
இந்தத் திட்டம் மாா்ச் 8 ஆம் தேதிக்குள் தொடங்கப்படும் என்றும் பாஜக அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், இது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இத்திட்டம் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை. அமைச்சரவையில் இல்லாவிட்டாலும், சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்குப் பதிலாக, பாஜக தலைவா்கள் முழு அமா்வையும் அரவிந்த் கேஜரிவாலை துஷ்பிரயோகம் செய்து கழித்தனா். அவா்கள் தில்லி பெண்களை வஞ்சித்துவிட்டனா்.
பிரதமா் மோடி தில்லி பெண்களுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வா் ரேகா குப்தா நிறைவேற்றத் தவறிவருகிறாா். ஆம் ஆத்மி கட்சி மாா்ச் 8 (சா்வதேச மகளிா் தினம்) நிதி உதவி வழங்கப்படும் என ஏதும் தெரிவிக்கவில்லை. பாஜகவும் பிரதமரும் இந்த தேதியை வழங்கினா். இப்போது, ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசு தில்லி மக்களுக்கு பிரதமா் அளித்த வாக்குறுதியை மீற உள்ளது.
தில்லியில் பெண்கள் ரூ.2,500க்காக காத்திருக்கிறாா்கள். பணம் எப்போது வரத் தொடங்கும் என்பதை பாஜக அவா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா் குல்தீப் குமாா்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின்போது, நகரத்தில் உள்ள பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆம் ஆத்மி கட்சி ரூ.2,100 அளித்திருந்த நிலையில், இத்தகைய வாக்குறுதியை பாஜக அளித்திருந்தது.
இந்த நிலையில், தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. 70 இடங்களில் 48 இடங்களை வென்றது., ஆம் ஆத்மி கட்சியின் இடங்கள் 22 ஆகக் குறைந்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் எந்த இடங்களிலும் வெற்றிபெறவில்லை.