செய்திகள் :

கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்... அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே!

post image

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய அஸ்வின் குறித்து சிஎஸ்கே நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளது.

ஆர். அஸ்வின் கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாகி மீண்டும் சென்னை அணியுடனே ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

அஸ்வின் சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக 221 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடைசி ஐபிஎல் தொடரில் அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அஸ்வின் அவரது சிறந்த செயல்பாடுகளைச் செய்யத் தவறியதால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானர்.

தற்போது, வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவதால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சிஎஸ்கே அணி அஸ்வின் குறித்து பேசியதாவது:

செப்பாக்கின் சொந்த சிங்கம். கேரம்-பந்தை திருப்புகிற சுந்தரன்! முதல்முறையாக மஞ்சள் நிற ஜெர்ஸியில் தூசி படிந்த சிஎஸ்கேவின் களத்தில் அறிமுகமாகி உலக அரங்கில் சுழல் பந்தில் ஆதிக்கம் செலுத்தினாய். எல்லாவற்றையும் கொடுத்தீர்கள்.

நமது பாரம்பரியத்தின் தூணாக இருந்து, சேப்பாக் கோட்டையில் கர்ஜித்தீர்கள். தெருவில் உள்ளவர்களிடமும் மரியாதையைப் பெற்றீர்கள் அஸ்வின்!

வாழ்க்கை ஒரு முழுமையான வட்டமாக அமைந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸில் தொடங்கி அங்கேயே முடிகிறது. எப்போதும் சிங்கம். எப்போதும் எங்களில் ஒருவர்! நினைவுகளுக்கு நன்றி அஸ்வின்! எனப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Forever a lion, forever one of us! Thank you for the Yellovely memories, Ash!

கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேற்றம்: டாப் 2-இல் கில், ரோஹித் நீடிப்பு!

ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களின் தரவரிசைப் பட்டியலில் கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேறியுள்ளார். இந்தியாவின் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா முதலிரண்டு இடங்களில் நீடிக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு எதிர... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டு தடை: இந்திய வீரர்களுக்கு ரூ. 200 கோடி இழப்பு! தோனி, கோலி, ரோஹித்துக்கு அதிக பாதிப்பு!

பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளனர்.பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை ... மேலும் பார்க்க

புற்றுநோய்: 6-ஆவது அறுவைச் சிகிச்சை செய்த மைக்கேல் கிளார்க்!

ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனக்கு ஆறாவது முறையாக புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்ததாக பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் விழிப்புணர்வு வேண்டியே பதிவி... மேலும் பார்க்க

திரிபுரா அணியில் இணையும் விஜய் சங்கர்! 13 ஆண்டுக்குப் பின் தமிழக அணியிலிருந்து விலகல்!

தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் திரிபுரா அணியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லெவனில் விளையாடி வந்த, தமிழக அணியின் முன்னாள் ... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.RAVICHANDRAN ASHWIN RETIRED FROM IPL மேலும் பார்க்க

ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான சதத்தினை பதிவு செய்துள்ளார். சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் காயம் காரணமாக 80 சதவிகித போட்டிகளில் விளையாடாமல் இருந்தா... மேலும் பார்க்க