செய்திகள் :

கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

post image

மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால், இன்று (மே 7) நாடு முழுவதும் போர் கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, கேரளத்திலுள்ள 14 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் இன்று (மே 7) நடத்தப்பட்டுள்ளன. அதில், எர்ணாக்குளம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் இந்தப் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. அபாய ஒலி மூலம் துவங்கிய இந்த ஒத்திகையின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருளடையச் செய்யப்பட்டது.

மேலும், கட்டடத்தின் மேல் தளங்களில் நெருப்பு உண்டாக்கப்பட்டு அதனால் பரவிய புகைகளுக்கு இடையே மக்களை வெளியேற்றி போர்காலத்தில் தேவையான அத்தியாவசிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், தீயணைப்புப் படையினர், காவல் துறையினர் மற்றும் பொது பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், அம்மாவட்ட ஆட்சியரும் பங்குப்பெற்று இந்த முழு ஒத்திகையையும் அவர் மேற்பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஒத்திகையில் ஒருவர் படுகாயமடைந்ததைப் போல் சித்தரிக்கப்பட்டு அவருக்கு தேவையான முதலுதவி வழங்குவது மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட அவசரக் கால செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டன.

பின்னர், அந்தக் கட்டடத்தில் உருவாக்கப்பட்ட தீயானது உரிய தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் அணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஒத்திகைகள் அனைத்தும் போர் உள்ளிட்ட அவசரகாலங்களில் எவ்வாறு விரைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!

மூன்றே நாள்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பேரிழப்பு! - முப்படை அதிகாரிகள்

புது தில்லி: பாகிஸ்தான் ராணுவத்துக்கு 3 நாள் தாக்குதல்களில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று முப்படை அதிகாரிகள் இன்று(மே 11) தெரிவித்தனர்.ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டி... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தம்: உஷார் நிலையில் பாதுகாப்புப்படை!

புது தில்லி: ராஜஸ்தானில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இரவில் ட்ரோன், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் எதிரிகள் தாக்குதல்களைத் தொடுத்தால் எதிர... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: முப்படை அதிகாரிகள்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் இந்திய படைகளின் துல்லியமான தாக்குதலில் 3 முக்கிய பயங்கரவாதிகள் - யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ராஃப், முடாசிர் அஹ்மது ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று ராண... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: விமானப்படை தளபதி

புது தில்லி: பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி தெரிவித்தார்.ஆபரேஷன் சிந்தூர் குறி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது? 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! - முப்படை அதிகாரிகள்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று(மே 11) மாலை செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.அவர் தெரிவித்திருப்பதாவது: “ஆபரேஷன்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக காஷ்மீரில் நிவாரண முகாம்கள்

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவியதைத் தொடர்ந்து, அங்கு எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து... மேலும் பார்க்க