செய்திகள் :

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல்: கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

post image

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புறம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாகக் கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாராவது? சிகிச்சைக்கு வந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிபா வைரஸ் பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..

நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. குறிப்பாகப் பழம் தின்னி வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் பரவுகிறது. இதன் பாதிப்பு மூளைக்காய்ச்சல் அறிகுறிகளை வெளிப்படுத்தும், கடும் காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவு இழத்தல், மனக் குழப்பம், கோமா மற்றும் மரணம் ஏற்படலாம்.தொற்று ஏற்பட்ட ஐந்து முதல் 15 நாள்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும். அது தென்பட்ட 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் தீவிர மயக்க நிலை சுய நினைவு இழத்தல், மனக்குழப்பம் ஏற்படலாம், பாதிப்பைக் கண்டறிய காய்ச்சல் மற்றும் மூளை அலர்ஜி நோய்களுக்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும், ரத்தம் மாதிரிகளை பரிசோதித்தும் கண்டு அறியலாம்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களைத் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும், சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் கவனித்துக் கொள்பவர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் நன்றாகத் தண்ணீரில் கழுவிப் பயன்படுத்த வேண்டும், விலங்குகள் கடித்ததைச் சாப்பிடக்கூடாது. பன்றிகளைக் குடியிருப்பு பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

The District Collector has advised the public in Coimbatore to seek treatment at a government hospital if they have flu-like symptoms.

வெள்ளை சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால் தலைவனா? யாரைச் சொல்கிறார் அண்ணாமலை?

ஒரு தலைவனுக்கு பழிவாங்கும் நோக்கு இருக்கக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னை உத்தண்டியில் இன்று நடைபெற்ற அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண... மேலும் பார்க்க

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒரு தவறு நடைபெறுகிறது... மேலும் பார்க்க

காவலாளி அஜித்குமார் மரண வழக்கு- சிபிஐ வழக்குப்பதிவு

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவ... மேலும் பார்க்க

அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள தவெகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் விஜயும் கலந்துகொள்ள உள்ளார்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல... மேலும் பார்க்க

விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு

கோவை : ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணை தொய்வாக இரு... மேலும் பார்க்க

தமிழக பள்ளிகளிலும் இனி கடைசி பெஞ்ச் கிடையாது!

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அ... மேலும் பார்க்க