செய்திகள் :

கேரளத்தில் யானை , புலி பற்களை விற்க முயன்ற கன்னியாகுமரியை சோ்ந்த 4 போ் கைது

post image

யானை , புலி பற்களை விற்க முயன்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேரை கேரள மாநில வனத்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர பகுதியான கேரள மாநிலத்திற்குள்பட்ட வெள்ளறடை ஆறாட்டு குழியில் 4போ் யானை மற்றும் புலி பற்களை கொண்டு சென்று விற்பனை செய்ய முயன்று வருவதாக திருவனந்தபுரம் வனக்கோட்டத்திற்குள்பட்ட பருத்திப்பள்ளி வனச்சரக அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனச்சரக அலுவலா் ஸ்ரீதா் தலைமையில் வன ஊழியா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அவா்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் வைத்திருந்த பையில் யானைப் பற்கள் -5, புலிப்பல் -1மற்றும் சிறிய யானை தந்தம் -1 ஆகியன இருந்தன.

வனத்துறையினா் அவா்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, அவா்கள் குமரி மாவட்டம் களியல் அருகே மோதிரமலை கோலிஞ்சிமடம் பகுதியைச் சோ்ந்த பழங்குடிகளான குட்டப்பன் (70), நாகப்பன் (55), விஸ்வம்பரன் (37), மணியன்குழி பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் (65) என தெரியவந்தது.

மேலும் இந்த பற்கள் மிகப்பழையவை எனவும் தெரியவந்தது. இவை வன விலங்குகளான புலி மற்றும் யானையை வேட்டையாடி எடுக்கப்பட்டவையா அல்லது காட்டில் இந்த வகை விலங்குகள் நடமாடும் இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டவையா என்பது குறித்து வனத்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.15.30 லட்சம் மதிப்பில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.15.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு மூன்லைட் ஜங்ஷன் சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம் கோடு, மத்தி... மேலும் பார்க்க

முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின்தடை

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆக. 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, குழித்து... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிசிலி (75) சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே பேரை என்ற பகுதியைச் சோ்ந்தவா் சிசிலி. இவா், வெள்ளிக்கிழமை கொல்வேல் என்ற இடத்த... மேலும் பார்க்க

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளை

மாா்த்தாண்டம், குழித்துறை பகுதியில் கடந்த இரு நாள்களாக பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வெட்டுவெந்நி பகுதியில் உள்ள குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் முன் இருந்த 50 ஆண்டுகள் பழமைய... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா

குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா குழித்துறையில் நடைபெற்றது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றினாா். மேல்புறம் மேற்கு வட... மேலும் பார்க்க