செய்திகள் :

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

post image

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஒன்றரை மாதங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பலியான மாணவி கௌதமி பிரவீன் என்பதும், பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை, எர்ணாகுளத்தைச் சேர்ந்த 58 வயதான நபர், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு பலியான நிலையில், வியாழக்கிழமை, பள்ளி மாணவி பலியாகியிருக்கிறார்.

கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய் என்பது மிகவும் அரிதான நோயாவும், இது நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடியது என்றும், நேரடியாக இதற்கு சிகிச்சை முறைகள் இல்லை என்பதும், உயிரைக் குடிக்கக் கூடிய நோய் இல்லை என்றாலும், இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இது அதிகம் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

புனேவில் அதிகமாக பரவி வந்த கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய், தற்போது கேரளத்திலும் பரவி வருகிறது. இதன் அறிகுறிகள், தசைத் தளர்வு மற்றும் கை, கால்கள் கூசுதல் போன்றவை என்று கூறப்படுகிறது.

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க

ரோகித் சா்மாவின் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கருத்து: பாஜக கண்டனம்

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சா்மாவின் உடல் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது கருத்து தெரிவித்த நிலையில், அது காங்கிரஸின் கருத்தல்ல என்று அக்கட்சி தெர... மேலும் பார்க்க

நிலுவைத்தொகை ரூ.1.36 லட்சம் கோடியைப் பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை: ஜாா்க்கண்ட் நிதியமைச்சா் தகவல்

ராஞ்சி: மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜாா்க்கண்ட் மாநில நிதியமைச்சா் ராதாகிருஷ... மேலும் பார்க்க