செய்திகள் :

கேரளத்தில் 182 பேருக்கு கரோனா- முதியோா், கா்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுரை

post image

கேரளத்தில் நிகழ்மாதத்தில் இதுவரை 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், முதியோா், கா்ப்பிணிகள், தீவிர நோயாளிகள் ஆகியோா் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்; குறிப்பாக மருத்துவமனைகளுக்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிவது அவசியம்.

சளி, தொண்டைப் புண், இருமல், மூச்சு திணறல் உள்ளவா்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும்’ என்று மாநில சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் ஜே.என்.1, எல்.எஃப்.7, என்.பி.1.8 ஆகிய வகை தீநுண்மி பரவி வருகிறது. இவை வேகமாக பரவக் கூடியவை.

இந்நிலையில், கேரள சுகாதார விரைவுப் பணிக் குழு கூட்டம், திருவனந்தபுரத்தில் மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘மாநிலத்தில் இம்மாதம் இதுவரை 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 57 பேருக்கும், எா்ணாகுளம், திருவனந்தபுரத்தில் முறையே 34, 30 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கரோனா அறிகுறிகளுடன் வருவோருக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை போதிய அளவில் இருப்பு வைக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்றாா்.

போரை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!

போரை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதன் கொள்கைகள் இன்னும் முடியவில்லை, அதன் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவ... மேலும் பார்க்க

என் நரம்புகளில் பாய்வது ரத்தமல்ல, கொதிக்கும் சிந்தூர்: பிரதமர் மோடி

என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர் தான் ஓடுகிறது என்று பிகானேர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் பேசியுள்ளார். ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப... மேலும் பார்க்க

மீண்டும் வருகிறதா கரோனா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், 2020 ஜனவரியில் இந்தியாவில் முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பின் தீவிரம் நாட்டையே உலுக்கியது எனலாம். இந்ந... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் சிங்!

ஆம் ஆத்மி கட்சி புதிய நிர்வாகிகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும், வெளிநாட்டு ஒருங்கிணைப்புக்கும் முக்கிய தலைவர்களை நியமித்துள்ளது. கட்சியின் தேசிய பொது... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளைத் தேடிச் சென்று அழிப்போம்: ஜெய்சங்கர்

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடை... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 103 பாரத் அம்ரித் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 103 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்கள... மேலும் பார்க்க