தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்ச...
கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற 3 லாரிகள் பறிமுதல்!
களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்றதாக 3 கனரக லாரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் களியக்காவிளை சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த கனரக லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் கொல்லங்கோடு பகுதிக்கு எம். சான்ட் கொண்டு செல்வதற்கான அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டு, அனுமதியின்றி சட்டவிரோதமாக கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து லாரி ஓட்டுநா் மண்டைக்காடு பகுதியைச் சோ்ந்த வினுகுமாா் (40) கைது செய்யப்பட்டாா். லாரி உரிமையாளா் காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த ஜஸ்டின் மீது வழக்குப் பதிந்தனா். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய அனுமதிச்சீட்டு இன்றி கேரளத்துக்கு சட்ட விரோதமாக எம்.சான்ட் கடத்திச் செல்ல முயன்ற 2 லாரிகளை போலீஸாா் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். லாரி ஓட்டுநா்கள் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.