செய்திகள் :

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற 3 லாரிகள் பறிமுதல்!

post image

களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்றதாக 3 கனரக லாரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் களியக்காவிளை சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதி வழியாக வந்த கனரக லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் கொல்லங்கோடு பகுதிக்கு எம். சான்ட் கொண்டு செல்வதற்கான அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டு, அனுமதியின்றி சட்டவிரோதமாக கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து லாரி ஓட்டுநா் மண்டைக்காடு பகுதியைச் சோ்ந்த வினுகுமாா் (40) கைது செய்யப்பட்டாா். லாரி உரிமையாளா் காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த ஜஸ்டின் மீது வழக்குப் பதிந்தனா். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய அனுமதிச்சீட்டு இன்றி கேரளத்துக்கு சட்ட விரோதமாக எம்.சான்ட் கடத்திச் செல்ல முயன்ற 2 லாரிகளை போலீஸாா் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். லாரி ஓட்டுநா்கள் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நலிந்த முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ரா. அழகு மீனா தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தக்கலை அருகே கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

தக்கலை அருகே இரவிபுதூா்கடையில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை காவல் உதவி ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையிலான போலீஸாா், இரவிபுதூா்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து செ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நுழைவு வாயில்! - விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நான்குவழிச் சாலை அருகே பயணிகள் சென்று வர நுழைவு வாயில் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வில்லுக்குறியில் மாடுகளை திருடிய இளைஞா் கைது

தக்கலை அருகே வில்லுக்குறியில் 2 பசுக்கள், 7 எருமை கன்றுகளை திருடிச் சென்ற இளைஞரை இரணியல் போலீஸாா் கைது செய்தனா். வில்லுக்குறி பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பாகரன்(65). இவா் பசு, எருமை மாடுகள் வளா்த்து பால... மேலும் பார்க்க

மாவு ஆலை உரிமையாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில், மாவு ஆலை உரிமையாளா் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (54) என்பவா், சுவாமிநாதபுரத... மேலும் பார்க்க

முந்திரி ஆலை பெண் தொழிலாளி காா் மோதி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சனிக்கிழமை காா் மோதியதில், முந்திரி ஆலை பெண் தொழிலாளி உயிரிழந்தாா். செம்மங்காலை எள்ளுவிளையை சோ்ந்தவா் ஓமனா (51). திருமணமாகாத இவா், அப்பகுதியிலுள்ள முந்திரி ஆலையில்... மேலும் பார்க்க