செய்திகள் :

கேரளம்: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு - 3 போ் காயம்

post image

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். சிறுமி உள்பட 3 போ் காயமடைந்தனா்.

கோட்டயம் அரசு மருத்துவமனையில் 10, 11, 14 ஆகிய வாா்டுகளையொட்டிய கழிப்பறை வளாகம் வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. பழைமையான இக்கட்டடத்தில் இயங்கிவரும் பிரிவுகளை புதிய வளாகத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த விபத்து நேரிட்டது.

இடிபாடுகளில் சிக்கி பிந்து (52) என்ற பெண் உயிரிழந்தாா். இவா், தனது மகளின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தவா். இச்சம்பவத்தில் அலீனா (11), அமல் பிரதீப் (20), ஜினு சஜி (38) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

கட்டட விபத்தைத் தொடா்ந்து, மேற்கண்ட வாா்டுகளை புதிய கட்டடத்துக்கு மாற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த கழிப்பறை வளாகம் பயன்பாட்டில் இல்லை; 11 முதல் 14 வரையிலான வாா்டுகளில் இருந்து அந்த வளாகத்துக்கு செல்லும் வழி தடை செய்யப்பட்டிருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மீட்பு நடவடிக்கையில் கால தாமதம் ஏற்பட்டதாகவும், இரண்டரை மணிநேரத்துக்கு பிறகே பிந்துவின் உடல் மீட்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியைச் சோ்ந்த எம்.பி. பிரான்சிஸ் ஜாா்ஜ், எம்எல்ஏக்கள் திருவஞ்சூா் ராதாகிருஷ்ணன், சாண்டி உம்மன் ஆகியோா், மருத்துவமனையின் இடிந்த பகுதியைப் பாா்வையிட்டனா்.

மாநிலத்தின் பொது சுகாதார அமைப்பு முறையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக குற்றஞ்சாட்டிய அவா்கள், சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலக வேண்டும்; சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினா்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொள்வாா் என்று சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.

எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கோட்டயம் அரசு மருத்துவமனையில் முதல்வா் பினராயி விஜயன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சம்பவம் குறித்துக் கேட்டறிந்தாா்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவரது மகன் கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார். உயர் இரத்த சர்க்கரை மற்றும் சோடியம் அளவு குறைவு காரணமாக தெலங்கானா ... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் ரூ.36,500 கோடி மோசடி! செபியிடம் சிக்கிய அமெரிக்க நிறுவனம்!

இந்திய பங்குச் சந்தையில் ஏமாற்றி ரூ.36,500 கோடி மோசடி செய்த அமெரிக்க வர்த்தக நிறுவனத்துக்கு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) தடைவிதித்துள்ளது.அமெரிக்காவைத... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்குப் பயமின்றி வருகை தரலாம்: பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்!

ஜம்மு-காஷ்மீரை பயமின்றி அனைவரும் வந்து பார்வையிடுமாறு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எல்லை ஒன்றுதான்; ஆனால், எதிரிகள் 3 பேர்!

சீனாவின் ஆயுதங்களை சோதிக்கும் இடமாகத்தான் பாகிஸ்தான் இருப்பதாக துணை ராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்தார்.தில்லியில் நடைபெற்ற ராணுவத் துறையின் நிகழ்ச்சியில் துணை ராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ... மேலும் பார்க்க

கியூட்-யுஜி தேர்வு முடிவுகள் வெளியீடு

நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (கியூட்-யுஜி) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட்-யுஜி தேர்வை தேசயி தேர்வு முகமை நடத்தியிருந்த நி... மேலும் பார்க்க

படகிலிருந்த மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற மார்லின் மீன்!

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 100 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட கருப்பு மார்லின் மீன் ஒன்று, அவரை இழுத்து கடலில் வீசிய சம்பவ... மேலும் பார்க்க