கேரள எல்லையையொட்டிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் இன்று(மே 27) பலத்த மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.