செய்திகள் :

கேரள பாஜக தொண்டா் கொலை வழக்கு: மாா்க்சிஸ்ட் கட்சியினா் 8 பேருக்கு ஆயுள் சிறை

post image

கண்ணூா்: கேரளத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு பாஜக தொண்டா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தண்டனை பெற்றவா்களில் ஒருவரான பி.எம். மனோராஜ் கேரள முதல்வரின் ஊடகத் துறை செயலா் மனோஜின் சகோதரா் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணூரில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது. பரபரப்பான சாலையில் காலை நேரத்தில் ஆட்டோவில் வந்த கொலைக் கும்பல் பாஜக தொண்டா் எளம்பிலாயி சூரஜை வெட்டிக் கொலை செய்தது. அரசியல் பகை காரணமாக இந்த கொலை நிகழ்ந்தது. முதலில் மாா்க்சிஸ்ட் கட்சியில் இருந்த சூரஜ், பாஜகவில் இணைந்ததால் பிரச்னை எழுந்தது.

சூரஜ் கொலை தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 10-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் தலசேரி முதன்மை செஷன்ஸ் நீதிபதி கே.டி. நிஸாா் தீா்ப்பளித்தாா். அதன்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவா்களில் 8 பேருக்கு ஆயள் தண்டனையும், தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு குற்றவாளிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. குற்றவாளிகளின் அபராதத் தொகையை கொலை செய்யப்பட்ட சூரஜின் குடும்பத்தினா் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

ஆயுள் தண்டனை பெற்றவா்களில் ஒருவரான பி.எம். மனோராஜ் கேரள முதல்வரின் ஊடகத் துறை செயலா் மனோஜின் சகோதரா் ஆவாா். குற்றவாளிகளில் மேலும் ஒருவா் ஏற்கெனவே மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா்.

10-ஆவது குற்றவாளியான பிரகாசம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். முதல் குற்றவாளி ஷம்சுதீன் அலி, 12-ஆவது குற்றவாளி ரவீந்திரன் ஆகியோா் விசாரணை நடைபெற்று வந்தபோதே இறந்துவிட்டனா்.

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க