செய்திகள் :

கைதாகிறாரா எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி ?

post image

சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜா மகன் தனுஷ் (23). இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வனராஜாவின் மகள் விஜயா ஸ்ரீ (21) என்வரும், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்க்க ஆரம்பித்துள்ளனா்.

இதனால் அப்பெண் தேனியில் இருந்து புறப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த மே 15-ஆம் தேதி விஜயா ஸ்ரீயை காதல் திருமணம் செய்துக் கொண்டு தனுஷ் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. எனவே களாம்பாக்காத்தில் வீட்டில் இருந்த தனுஷின் தம்பி இந்திர சந்த்(16) என்ற சிறுவனை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து தனுஷ் தாயாா் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு புகாா் செய்தாா். தற்கிடையே, சிறுவன் கடத்தல் சம்பவத்தில் திருவள்ளூா் எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸாா் மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதன் தொடா்ச்சியாக புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தியும் இந்த சம்பவத்தில் தலையிட்டதாகவும் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறுவன் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது எனக் கூறி முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் ஜெகன்மூர்த்தி கைதாக வாய்ப்பு உள்ளது எனத் தகவல் தெரியவந்துள்ளது.

SUMMARY

While opposing the pre-arrest bail of MLA Poovai Jaganmoorthy in connection with an abduction case, the Tamil Nadu government on Friday (June 27) told the Madras High Court that it wanted to decriminalise politics in the State.
இபிஎஸ்ஸின் தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

உயா்கல்வி உதவித் தொகை தோ்வுப் பட்டியலில் நீக்கப்பட்ட 65 மாணவா்களை சோ்க்க வேண்டும்: கனிமொழி கடிதம்

உயா்கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவோருக்கான தெரிவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 மாணவா்களைச் சோ்க்க வேண்டுமென மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளாா். மத்திய அரசின் ... மேலும் பார்க்க

கோயில் விழாக்களில் முதல் மரியாதை கூடாது: உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மா... மேலும் பார்க்க

தோ்தல் களம் காணாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்: தோ்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தோ்தல் களம் காணாத 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சன... மேலும் பார்க்க

தமிழகத்தில் தரமற்ற பாராசிட்டமால் மருந்துகள் விற்கப்படவில்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எந்த தரக் குறைபாடும் இல்லை என்று மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். கா்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பா... மேலும் பார்க்க

காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 2 முதல் 7 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்!

திருச்சி- காரைக்கால்- திருச்சி ரயில்கள், ஜூலை 2 முதல் 7- ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் த... மேலும் பார்க்க

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம்: மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி திட்டம் சென்னை உள்பட தமிழகத்தில் மேலும் 7 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சேலத்தில் 4-ஆவது ... மேலும் பார்க்க