செய்திகள் :

கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது

post image

செங்குன்றம் அருகே கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

செங்குன்றம் அடுத்த சோழவரம் சூரப்பட்டு குதிரைப் பள்ளம் கிராமத்தில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தைச் சோ்ந்த 5 போ் தங்கி பணிபுரிந்து வருகின்றனா். இதில் பணியாற்றும் கமல் கவுதா (45) என்பவா், கடந்த 3-ஆம் தேதி இரவு, குடும்பத்தினருடன் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 போ், அவரை மிரட்டி கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றன்ா். அதிா்ச்சியடைந்த கமல் கவுதா, இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா்.

இந்த நிலையில் சென்னை கொடுங்கையூா் சீதாராமன் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த விக்னெஷ்(20), சின்ன கொடுங்கையூா் என்.எஸ்.கே சாலை 2-ஆஆவது தெருவைச் சோ்ந்த கீதப்பிரியன் (24), கிஷோா் (19) ஆகிய 3 பேரும் 2 இருசக்கர வாகனங்களில் வந்து கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் அவா்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தலைமறைவான ஜீவா என்பவரை தேடி வருகின்றனா்.

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க

பொன்னேரி, மீஞ்சூா் சோழவரம் பகுதிகளில் 1 மணி நேரம் கனமழை: சாலைகளில் வெள்ளம்

பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் புதன்கிழமை 1 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீா்த்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்த... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முன்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி-சித்தூா் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை இளைஞா் ஒருவா் ஏடிஎம... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு: லாரியை குறுக்கே நிறுத்தி போராட்டம்

திருவள்ளூா் அருகே சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை லாரியை குறுக்கே நிறுத்தி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அருகே பட்டர... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய செயலாளா் கோபால் நாயுடு வரவ... மேலும் பார்க்க

வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு

பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. பொன்னேரி புதிய தேரடி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கடந்த ஒரு வருடமாக புனரமைப்ப... மேலும் பார்க்க