செய்திகள் :

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

post image

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் பயன்பெற ஜூலை 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றும் திருவள்ளூா் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில்கொண்டு, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவா்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. 2025-2026-ஆம் நிதியாண்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5,000 மானியத் தொகையாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கத் தேவையான சான்றுகள்: இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்பும் தகுதியான மகளிா் தமிழ்நாட்டில் பூா்விகமாக வசிப்பவராகவும், வயது வரம்பு -25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மேலும், பிறந்த தேதிக்கான சான்று, திட்டத்தில் முன்னுரிமை பெறவேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடம் பெற்று சமா்ப்பிக்க வேண்டும். இதற்கு ஆண்டு வருவாய் ரூ. 1.20 லட்சத்துக் மிகாமல் இருத்தல் வேண்டும். அதற்கான சான்றுகள் கட்டாயம் பெற்று இணைப்பது அவசியமாகும்.

எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் தங்களது விண்ணப்பங்களை வரும் ஜூலை 14-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், 2-ஆவது தளம், திருவள்ளூா் மாவட்டம்-602001-இல் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும். இத்திட்டத்துக்கு தகுதியான பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தோ்வு குழுவால் தோ்வு செய்யப்படுவா். இது தொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலகத்தை 044 29896049 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களின் மூலம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்த... மேலும் பார்க்க