செய்திகள் :

கையில் கறுப்பு பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி! ஏன்?

post image

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டைகளுடன் விளையாடினர்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியாவும், 2-வது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணியினர் முதலில் பேட்டிங் ஆடி வருகின்றனர்.

இதையும் படிக்க: உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் பத்மகர் ஷிவல்கர் காலமானார்!

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்திய வீரர்கள் தங்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கினர். உள்ளூர்ப் போட்டிகளில் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் பத்மகர் ஷிவல்கர் காலமானதைத் தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கறுப்பு பட்டையுடன் அவர்கள் விளையாடி வருகின்றனர்.

மறைந்த பத்மகர் ஷிவல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்திய அணி இன்று கையில் கறுப்பு பட்டைகளை அணிந்து விளையாடும் என்று பிசிசிஐயும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: நியூஸி. தொடர்: பாகிஸ்தான் அணியிலிருந்து ரிஸ்வான், பாபர் அசாம் நீக்கம்!

ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி - இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளை... மேலும் பார்க்க

ஒரே போட்டி.. பல சாதனைகள் படைத்த விராட் கோலி!

ஒரே போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

நியூசி.க்கு எதிரான தொடரில் இவரே தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார்: பாக். கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆக்யூப் ஜாவத் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

336* கேட்சுகள்.. விராட் கோலி புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்து ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டா... மேலும் பார்க்க

முதல் அரையிறுதி: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முத... மேலும் பார்க்க

உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் பத்மகர் ஷிவல்கர் காலமானார்!

உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவானான பத்மகர் ஷிவல்கர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடாவிட்டாலும், உள்ளூர்ப் போட்டிகளில் கோலோச்சிய பத்மகர் ஷிவல்கர் கிரிக... மேலும் பார்க்க