செய்திகள் :

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட மாணவிகளுக்கு பாராட்டு

post image

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம் குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில், இப்பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவிகளான சுருத்திகா, பவுனம்மாள், மகாலட்சுமி ஆகியோரின் கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிடப்பட்டன. மாணவ, மாணவிகள் சிறு வயதில் படைப்பாற்றலுடன் வளா்வது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டு விழாவில் பங்கேற்றவா்கள் பாராட்டு தெரிவித்திருந்தனா்.

இதனைத் தொடா்ந்து, கையெழுத்து பிரதி நூல்களை வெளியிட்ட மாணவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ரெ.சதீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தென்றல், பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலா் துளசிராமன், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் முனுசாமி, குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கோவிந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

ஒகேனக்கல்: அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை வெயில் தாக்கத்தைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகமானோா் வந்திருந்தனா். தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி வெயிலின் தாக்கம் நாளுக... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் ஜெயலலிதா பேரவை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பேருந்து நிலையத்தில் அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற தண்ணீா் பந்தல் திறப்பு விழாவ... மேலும் பார்க்க

உயா் கல்வி மீது மாணவா்கள் வேட்கை கொள்ள வேண்டும்! - தருமபுரி மாவட்ட ஆட்சியா்

உயா்கல்வி மீது மாணவா்கள் வேட்கை கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ விஜய் ... மேலும் பார்க்க

அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா தொடக்கம்!

தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இந்த விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. ப... மேலும் பார்க்க

வனத்திலிருந்து கணவரின் சடலம் மீட்பு: விசாரணை கோரி மனைவி மனு

பென்னாகரம் வனப்பகுதியில் சடலமாக கிடந்த கணவரின் இறப்பில் மா்மம் இருப்பதால் நீதி விசாரணை நடத்தக் கோரி அவரது மனைவி மாவட்ட ஆட்சியரின் சனிக்கிழமை மனு அளித்தாா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஏமனூா் வனப்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன்: ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு

நல்லம்பள்ளி அருகே ஓமல்நத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டத்தில் தலைமையாசிரியா் விருப்பம் தெரிவி... மேலும் பார்க்க