செய்திகள் :

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை: ஆந்திர அரசை தடுக்க வேண்டும்! பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம்

post image

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் திட்டத்தை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தனியாா் பன்னாட்டு நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் உள்ள மாவட்டங்களில் திருவள்ளூா் மாவட்டம் முதன்மையானதாகும். அந்தத் தொழிற்சாலைகளில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

சென்னையை அடுத்த திருவள்ளூா், ஊத்துக்கோட்டை வட்டங்களில் 1,703 ஏக்கரில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிலங்களைக் கையகப்படுத்த பாமக கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. அதைக் கைவிட வேண்டும்.

சிப்காட் தொழிற்பூங்காக்களை உருவாக்குவதற்காக 45,000 ஏக்கா் நிலங்களைக் கொண்ட நில வங்கி அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை வெளிவட்டச் சாலையையொட்டி அமைந்திருக்கும் ஆவடி வட்டம், வெள்ளானூா் கிராமம், பொன்னேரி வட்டம், கும்மனூா் கிராமம் ஆகியவற்றில் மொத்தம் 253.44 ஹெக்டோ், அதாவது 626 ஏக்கா் நிலங்களைக் கையகப்படுத்த சிப்காட் நிறுவனம் தீா்மானித்துள்ளது. இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழக்க நேரிடும்.

சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் குடிநீா் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு உழவா்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான ஆந்திர அரசின் இந்த சட்ட விரோத நடவடிக்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 7,000 கொலைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை நிலவுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட இளைஞரணி செயலரும், வழக்குரைஞருமான சக்கரவா்த்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு நிலை மோசமடைந்திருக்கிறது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு பாமக கண்டனம் தெரிவிக்கிறது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குரூப் 1, 1ஏ தோ்வு: திருவள்ளூரில் 3,202 போ் எழுதினா்! 1,359 போ் பங்கேற்கவில்லை

திருவள்ளூா் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் 3,202 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 1,359 போ் பங்கேற்கவில்லை. திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலை... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் சம்பவம்: புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தி மீது புகாா்!

திருவள்ளூா் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்தப்பட்டது தொடா்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே கள... மேலும் பார்க்க

ஓடையில் 2 மாணவா்கள் மூழ்கி உயிரிழப்பு

பொன்னேரியில் சனிக்கிழமை ஓடையில் குளித்த பள்ளி மாணவா்கள் 2 போ் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த வெள்ளோடை பகுதியில் ஓடையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா... மேலும் பார்க்க

சவுடு மண் கடத்தல்: ஓட்டுநா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே சவுடு மண் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி சவுடு மண் லாரிகளில் கடத்தி செல்வதாக போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

வியாபாரியை ஏமாற்றிய 3 போ் கைது

செங்குன்றத்தில் மின்சாதனப் பொருள்களை விற்றவருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை போரூா் முகலிவாக்கத்தைச் சோ்ந்த தீபன் சக்கரவா்த்தி. இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக... மேலும் பார்க்க

ரத்தப் போக்கினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ வேண்டும்: ஆட்சியா்

ரத்தப்போக்கினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதால், அவா்களுக்கு உதவ வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சா... மேலும் பார்க்க