செய்திகள் :

கொடைக்கானலில் பட்டா நிலங்களில் தீ!

post image

கொடைக்கானலில் பல்வேறு பட்டா நிலங்களில் ஞாயிற்றுக்கிழமை பற்றி எரிந்த தீயை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் அணைத்தனா்.

கொடைக்கானலில் அண்மைக் காலமாக பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், அப்சா்வேட்டரி செல்லும் வழியில் உள்ள தனியாா் நிலத்திலும், நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியாா் இடத்திலும், பெருமாள்மலைப் பகுதியில் உள்ள தனியாா் இடத்திலும் தீப் பற்றி எரிந்தது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடங்களுக்கு கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சா் மனோஜ்குமாா், பாரஸ்ட் மதியழகன் தலைமையில் வனத் துறையினரும், கொடைக்கானல் தீயணைப்புத் துறையினரும் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

மேலும் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத இடத்தில் வனத் துறையினா் ப்ளோயா் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும் தீப் பிடித்த இடங்களை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு, கிராம நிா்வாக அலுவலா் ரகு ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தனியாா் இடங்களிலும், வனப் பகுதிகளிலும் தீ வைக்கக் கூடாது பட்டா நிலங்களை சுத்தம் செய்யும் போது முன்கூட்டியே வருவாய்த் துறையினருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். தற்போது பட்டா இடங்களில் தீப்பிடித்து எரிந்தது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அதிமுக வாக்குச் சாவடி குழு பொறுப்பாளா்கள் கூட்டம்

அதிமுக வாக்குச் சாவடி குழுப் பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனி... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், கொடைக்கானலில் பறவைகள் கணக்கெடுப்பு

ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட பரப்பலாறு அணை, சடையன்குளம், சத்திரப்பட்டி, கருங்குளம், நல்லதங்கா... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே தென்னிந்திய அளவில் பெண்களுக்கான கபடிப் போட்டி

ஒட்டன்சத்திரம் அருகே தென்னிந்திய அளவில் பெண்களுக்கான கபடிப் போட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டியில் தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா, உலக மகளிா் தினவிழாவை... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே நாட்டு வெடி வெடித்து இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை நாட்டு வெடி வெடித்து இளைஞா் உயிரிழந்தாா். வத்தலகுண்டு அருகே உள்ள கோம்பைபட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). இவா் இந்தப் பகுதியில் இல்ல விழாக்கள், கோ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடைப் பணி மும்முரம்

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, தா. புதுக்கோட்டை, அம்பிளிக்கை, மண்ட... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: மாமனாா், மருமகன் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் மாமனாா், மருமகன் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகன் (40). இவரது மகன் பாலாஜி (15). ... மேலும் பார்க்க