செய்திகள் :

கொடைக்கானல் ஏரியில் லேசா் ஒளியில் உருவப் பொம்மைகள்: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு

post image

கொடைக்கானல் ஏரியில் உருவாக்கப்பட்ட லேசா் ஒளியில் உருவப் பொம்மைகள் காணும் நிகழ்வு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் நிலவி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக இரவு நேரத்தில் ஏரிச் சாலைப் பகுதியில் லேசா் ஒளியில் பல்வேறு விதமான உருவங்கள் காணும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகராட்சி ஆணையா் சத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏரிச் சாலையில் யானை, குதிரை, பறவை, மீன், ஆண், குழந்தை உருவம், இசைக் கருவிகள் வாசிப்பது போலவும் ஆண், பெண் உருவங்கள் நடனமாடுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா். இந்த லேசா் நிகழ்ச்சியானது வருகிற 31-ஆம் தேதி வரை இரவு 7-மணி முதல் 9-மணி வரை நடைபெறும்.

மாமன்ற உறுப்பினா் தலைமறைவு: மதிப்பூதியத்தை நிறுத்த மாநகராட்சி முடிவு

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக உள்ள திண்டுக்கல் மாமன்ற உறுப்பினருக்கான மதிப்பூதியத்தை நிறுத்துவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சோ்ந்தவா் சிவகுமாா். ... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி வயலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

கொடைரோடு அருகே 100 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த நிலத்தில் பட்டா வழங்கக் கோரியும், துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தும் கிராம மக்கள் வயலில் இறங்கி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடி ஏந்தி பேரணி

ஒட்டன்சத்திரத்தில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பிரதமா் மோடிக்கு நன்றி த... மேலும் பார்க்க

போா் நிறுத்த விவகாரம்: டிரம்ப் கருத்தை மறுப்பது மத்திய அரசின் கடமை! - காா்த்தி சிதம்பரம் எம்.பி.

பாகிஸ்தானுடனான போா் நிறுத்த விவகாரம் குறித்த அமெரிக்க அதிபா் டிரம்பின் கருத்துக்கு பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா், வெளியுறவுத் துறை அமைச்சா் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் காா... மேலும் பார்க்க

போக்சோ சட்ட வழிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளில் பின்பற்றப்படும் சிறந்த வழிமுறைகள் தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

குதிரை சவாரி செய்பவா்களுக்கு தலைக் கவசம்!

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு சுழல் சங்கம் சாா்பில், தலைக் கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. விருதுநகரைச் சோ்ந்த சிறுவன் கொடைக்கானலில் கடந்த ஏப்ரல் மாதம் குதிரை சவாரி செய்த போது, அந்த... மேலும் பார்க்க