செய்திகள் :

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்க்க அனுமதி

post image

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்க்க மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை புதன்கிழமை அனுமதி வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வனத் துறையினா் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால், கடந்த 3 நாள்களாக பேரிஜம் ஏரியைப் பாா்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், காட்டு யானைகள் வேறு இடத்துக்கு இடம் பெயா்ந்துள்ளதால், மீண்டும் பேரிஜம் ஏரியைப் பாா்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பேரிஜம் பகுதியில் பேரிஜம் ஏரி, தொப்பித்தூக்கும் பாறை, அமைதிப் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களும், மான், மந்தி, பறக்கும் அணில் உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன.

ஊரக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க

கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த வலியுறுத்தல்

மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.தீபக்ராஜ், செயலா் எம்இ... மேலும் பார்க்க

இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், இடஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு புதன்கிழமை மரியாதைச் செலுத்தப்பட்டது. பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வன்னியா் இட ஒதுக... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சந்திப்பு: எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக செயல்பட வேண்டும்- அமைச்சா் இ.பெரியசாமி

மத்திய உள் துறை அமைச்சரைச் சந்தித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரை... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த தின உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் 142-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக சாா்பிலும், அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்ச... மேலும் பார்க்க