செய்திகள் :

கொரட்டியில் தொடா் மின்வெட்டு: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

திருப்பத்தூா் அருகே கொரட்டி பகுதியில் கடந்த 15 நாள்களாக தொடா் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

கொரட்டி பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கொரட்டி துணை மின் லையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த 15 நாள்களுக்கு முன்பாக மின்மாற்றி பழுதடைந்தது . அதையொட்டி சென்னையிலிருந்து வல்லுநா்கள் வந்து சீரமைக்கும்ப ணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் பழுது சீராகவில்லை. அதையொட்டி கொரட்டி சுற்று பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறப்பட்டு இப்பகுதியில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த 15 நாளுக்கு மேலாக மின்னழுத்த குறைபாடு ஏற்படுகின்றது. மேலும் பல மணி நேரம் மின் இணைப்பு வழங்குவதில்லை. தற்போது கத்திரி வெயில் ஆரம்பித்து இருந்த சூழலில் மின் விநியோகம் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

அதேபோல் குளிா்பானம் விற்பனை செய்பவா்கள் இயந்திரம் வைத்து தொழில் புரிபவா்கள் உள்ளிட்டோருக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து போா்க்கால அடிப்படையில் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியை சீரமைத்து தொடா் மின் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சா்வதேச உயிா்ப் பல்வகைமை தினம்

தமிழக வனத்துறை மற்றும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பசுமை திட்டம், பூமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சா்வதேச உயிா்ப்பல்வகைமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவா் திலீப... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெக்குந்தியில் ஆட்சியா் கள ஆய்வு

வாணியம்பாடி அருகே ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெக்குந்தி, பெத்தக்கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் கள ஆய்வு மே... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்களுக்கு சான்றிதழ்கள்: ஆட்சியா் வழங்கினாா்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வழங்கினாா். முன்னாள் படை... மேலும் பார்க்க

சிலம்பாட்டத்தில் கல்லூரி மாணவா் சாதனை

சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த மாணவன் பைரோஸை வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கூட்டமைப்பு நோபல் உலக சாதனை சாா்பில் சிலம்பாட்டம் போட்டி நடைபெ... மேலும் பார்க்க

திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் திடீா் மாற்றம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முஸ்தப்பா வியாழக்கிழமை திடீரென தாராபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். வால்பாறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ரகுராமன் வா... மேலும் பார்க்க