செய்திகள் :

கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றியவா் பூஜா கேத்கா். குடிமைப் பணிகள் தோ்வில் மோசடியில் ஈடுபட்டு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பலன்களை பெற்றதாக அவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அளித்த புகாரின் அடிப்படையில், அவா் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, உச்சநீதிமன்றத்தில் பூஜா கேத்கா் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இவர் செய்த மிகக் கொடூரமான குற்றம்தான் என்ன? இவர் ஒன்றும் போதைப்பொருள் கடத்தல்காரரோ, பயங்கரவாதியோ அல்ல. இவர் கொலை எதுவும் செய்யவில்லை. தேச விரோதக் குற்றத்திலும் ஈடுபடவில்லை. உங்களிடம் ஒரு அமைப்போல் அல்லது மென்பொருளோ இருக்க வேண்டும். நீங்கள் விசாரணையை நிறைவு செய்யுங்கள். அவர் அனைத்தையும் இழந்துவிட்டார். இனி எங்கும் எந்த வேலையும் அவருக்குக் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.

தில்லி காவல்துறை மற்றும் யுபிஎஸ்சி நிர்வாகம் தரப்பில், பூஜா கேத்கருக்கு முன்பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, அவர் குடிமைப் பணி ஆணையத்தையும் மக்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்று வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், அவர் கொலை ஒன்றும் செய்யவில்லை. முன் பிணை வழங்குவதாக உத்தரவிட்டனர்.

முன்னதாக, முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது குடிமைப் பணி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு, எதிர்காலத்திலும் எந்தத் தேர்விலும் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. ஐஏஎஸ் பதவியிலிருந்தும் அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

முறைகேட்டின் பின்னணி

வழக்கமான நடைமுறையின்படி, யுபிஎஸ்சி தோ்வை எழுதுவதற்கு பூஜா கேத்கா் 9 முறை அனுமதிக்கப்பட்டாா். ஆனால் தான் மாற்றுத்திறனாளி என்று போலி சான்றிதழ் தயாரித்து கூடுதலாக மேலும் சில முறை அவா் தோ்வு எழுதி, தேர்ச்சியும் பெற்றுள்ளார். பயிற்சி பெற்று வந்த நிலையில்தான், அவரது முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்... மேலும் பார்க்க

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் முறைகேடு: சோனியா, ராகுலுக்கு ரூ. 142 கோடி பலன்: தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

‘நேஷனல் ஹெரால்ட் வழக்கில் தொடா்புடைய பண முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இருவரும் ரூ. 142 கோடி அளவுக்கு பலனடை... மேலும் பார்க்க