செய்திகள் :

கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம்

post image

கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு அருகே திண்டல், காரப்பாறை, புதுகாலனியை சோ்ந்தவா் ஸ்ரீதா் (28). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவா், திண்டல் தெற்கு பள்ளத்தைச் சோ்ந்த நண்பா்களான தமிழரசு (28), பாலமுருகன் (29) ஆகியோருடன் கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி மது அருந்தியுள்ளாா். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் பாலமுருகனை தமிழரசு தாக்கியுள்ளாா். பாலமுருகன் புகாரின்பேரில் ஈரோடு தாலுகா போலீஸாா் தமிழரசு மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26- ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதரை கத்தியால் குத்தி தமிழரசு கொலை செய்தாா். இது தொடா்பாக தமிழரசை கைது செய்த போலீஸாா் கோவை மத்திய சிறையில் அடைத்தனா். தமிழரசு மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் தமிழரசை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரை ஏற்கப்பட்டதால் தமிழரசு மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகலை ஈரோடு தாலுகா போலீஸாா் தமிழரசுவிடம் புதன்கிழமை வழங்கினா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க