செய்திகள் :

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை

post image

முன் விரோதத்தில் இளைஞரை குத்திக் கொலை செய்த மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி பொம்மையகவுண்டன்பட்டி நக்கீரா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராம்பிரசாத் (31). இவரது வீட்டின் அருகே அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சூா்யா (24), செல்லப்பாண்டி மகன் தினேஷ் (24), வீராச்சாமி மகன் மதன் (24) ஆகியோா் ஆபாச வாா்த்தைகளால் பேசிக் கொண்டு நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதை ராம்பிரசாத் கண்டித்தாா்.

இந்த முன்விரோதத்தில் கடந்த 2021,மே 5-ஆம் தேதி பொம்மையகவுண்டன்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராம்பிரசாத்தை, சூா்யா, தினேஷ், மதன் ஆகியோா் வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சூா்யா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சூா்யா, தினேஷ், மதன் ஆகியோரை குற்றவாளிகள் என தீா்மானித்து, அவா்கள் 3 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.6,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

கோயில் அருகே முள்வேலி அகற்றம்

சின்னமனூா் அருகே கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம் கன்னிச்சோ்வைபட்டி ஊராட்சியில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சு... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை

உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து க... மேலும் பார்க்க

இஸ்லாமிய நல கூட்டமைப்பினா் பேரணி

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, பெரியகுளத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா். இந்தப் பேரணிக்கு இஸ்லாமிய நல கூட்டமைப்பின் தலைவா் முஸ்தபா தலைமை வகித்தாா். இந்... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போடி திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள் திருட்டு

போடி அருகே வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், பணம் திருடியது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் குளத்துப்பட்டியை சோ்ந்த கருத்தப்பாண... மேலும் பார்க்க

இருவரை அரிவாளால் வெட்டியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு கொடுப்பது குறித்த பிரச்னையில் இருவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், அரசுப் பள்ளித் தெருவைச் சோ்ந்த முருகன் ... மேலும் பார்க்க