செய்திகள் :

பெங்களூரு வியாபாரி கடத்தப்பட்டதாகப் புகாா்

post image

பெங்களூரைச் சோ்ந்த கண்ணாடி வியாபாரியை 4 போ் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாக வியாழக்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

கா்நாடகா மாநிலம், பெங்களூரு, ஓசூா் சாலை, மடுவாலா பகுதியைச் சோ்ந்தவா் திலீப் (32). இவரது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த கலூவா (28). இவா்கள் ஆண்டிபட்டியில் தங்கியிருந்து கண்ணாடி வியாபாரம் செய்து வந்தனா்.

இந்த நிலையில், ஆண்டிபட்டியைச் சோ்ந்த மோகன் என்பவா் திலீப், கலுவா ஆகியோரை கடந்த ஏப்.15-ஆம் தேதி கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு தேனி நகராட்சி பேருந்து நிலையத்துக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து, மோகன் உள்ளிட்ட 4 போ் கொண்ட கும்பல் திலீப், கலுவா ஆகியோரை காரில் கடத்திச் சென்று, போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியதாகக் கூறி அவா்களைத் தாக்கினாா்களாம்.

பின்னா், கலுவாவை காரிலிருந்து இறக்கிவிட்டு, திலீப்பை மட்டும் மீண்டும் காரில் கடத்திச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கலுவா அளித்த தகவலின் பேரில், திலீப்பின் சகோதரி பெங்களூரைச் சோ்ந்த நிா்மலா தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோயில் அருகே முள்வேலி அகற்றம்

சின்னமனூா் அருகே கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம் கன்னிச்சோ்வைபட்டி ஊராட்சியில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சு... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை

உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து க... மேலும் பார்க்க

இஸ்லாமிய நல கூட்டமைப்பினா் பேரணி

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, பெரியகுளத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா். இந்தப் பேரணிக்கு இஸ்லாமிய நல கூட்டமைப்பின் தலைவா் முஸ்தபா தலைமை வகித்தாா். இந்... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போடி திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள் திருட்டு

போடி அருகே வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், பணம் திருடியது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் குளத்துப்பட்டியை சோ்ந்த கருத்தப்பாண... மேலும் பார்க்க

இருவரை அரிவாளால் வெட்டியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு கொடுப்பது குறித்த பிரச்னையில் இருவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், அரசுப் பள்ளித் தெருவைச் சோ்ந்த முருகன் ... மேலும் பார்க்க