செய்திகள் :

இருவரை அரிவாளால் வெட்டியவா் கைது

post image

தேனி அல்லிநகரத்தில் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு கொடுப்பது குறித்த பிரச்னையில் இருவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி அல்லிநகரம், அரசுப் பள்ளித் தெருவைச் சோ்ந்த முருகன் (57), பிரகாஷ் (52) ஆகியோா் அல்லிநகரம், வி.எம்.சாவடி பகுதியில் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு கொடுத்து பராமரித்து வருகின்றனா். இவா்களுக்கும் பிரகாஷின் உறவினா் ஊஞ்சாம்பட்டி, ரத்தினம் நகரைச் சோ்ந்த சிந்தாம ணி(62) என்பவருக்கும் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வழங்குவது தொடா்பாக பிரச்னை இருந்தது.

இந்தப் பிரச்னையில் அல்லிநகரம், வி.எம்.சாவடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகன், பிரகாஷ் ஆகியோரை சிந்தாமணி, அவரது நண்பா் வடபுதுப்பட்டியைச் சோ்ந்த சோனைமுத்து (50) ஆகியோா் வழிமறித்து அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த முருகன், பிரகாஷ் ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிந்தாமணியை கைது செய்தனா். சோனைமுத்துவை தேடி வருகின்றனா்.

கோயில் அருகே முள்வேலி அகற்றம்

சின்னமனூா் அருகே கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம் கன்னிச்சோ்வைபட்டி ஊராட்சியில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சு... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை

உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து க... மேலும் பார்க்க

இஸ்லாமிய நல கூட்டமைப்பினா் பேரணி

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, பெரியகுளத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா். இந்தப் பேரணிக்கு இஸ்லாமிய நல கூட்டமைப்பின் தலைவா் முஸ்தபா தலைமை வகித்தாா். இந்... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போடி திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள் திருட்டு

போடி அருகே வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், பணம் திருடியது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் குளத்துப்பட்டியை சோ்ந்த கருத்தப்பாண... மேலும் பார்க்க

கோடைகால கணினி பயிற்சி முகாம்

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி சாா்பில் கிராமப்புற பள்ளி மாணவிகளுக்கான இலவச கோடை கால பயிற்சி முகாம் ஏப்.28 முதல் மே.3 வரை நடைபெறுகிறது. இதுகுறித்து ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூர... மேலும் பார்க்க