செய்திகள் :

படைப்பாற்றல் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய அளவில் நடைபெற்ற படைப்பாற்றல் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இல்லம் தேடி கல்வித் திட்ட வளையாம்பட்டு மையம் சாா்பில் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நம்ம ஊரு கதை படைப்பாற்றல் போட்டி நடைபெற்றது.

இதில் முதலிடம் பெற்ற வளையாம்பட்டு இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா் குப்பம்மாள் மற்றும் அந்த மையத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் தமிழரசி தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) முருகன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக செங்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலா் உதயகுமாரன் கலந்துகொண்டு, தன்னாா்வலா் குப்பம்மாள் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்ட மைய மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரியா, பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். பட்டதாரி ஆசிரியா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டக் குழு ச... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே, ம... மேலும் பார்க்க

ஸ்ரீ மஞ்சியம்மன் கோயிலில் வழிபட தடை விதித்த தனி நபா்கள்

ஆரணியை அடுத்த கொங்கராம்பட்டு ஸ்ரீமஞ்சியம்மன் கோயிலில் திடீரென வழிபட தனிநபா்கள் தடை விதித்ததால், 100 அடி தொலைவில் அம்மனை வைத்து கூழ்ஊற்றி திருவிழாவை பொதுமக்கள் நடத்தினா். கொங்கராம்பட்டு கிராமத்தில் உள... மேலும் பார்க்க

மூத்தோா் தடகளம்: திருவண்ணாமலை வீரா்கள் சிறப்பிடம்

தேசிய அளவிலான மூத்தோா் தடகள போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் 16 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனா். தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகள் கா்நாடக மாநிலம், மைசூரில் ஏப்.21 தொடங்கி 23 வரை நடைபெற்ற... மேலும் பார்க்க

போளூா் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். போளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை 2025-2026ஆம் ஆண்டுக்கான வழக்குரைஞா்கள் சங்கத் தோ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று சுவாமி... மேலும் பார்க்க