செய்திகள் :

கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு புலனாய்வுத் துறைக்கு மாற்றம்!

post image

சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்படுவதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாவலரின் அறையில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி மாணவி ஒருவரை முன்னாள் மாணவர் உள்பட மூன்று மாணவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

படுகாயமடைந்த மாணவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், பாலியல் வன்கொடுமையை அவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்ததாகவும், இதுகுறித்து வெளியே கூறினால் விடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, மனோஜித் மிஷ்ரா(31), ஸைப் அஹமது(19) மற்றும் பிரமீத் முக்கோபாத்யாய்(20) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான முன்னாள் சட்ட மாணவா் மனோஜித் மிஷ்ரா, திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி முன்னாள் நிா்வாகி எனத் தெரியவந்ததை அடுத்து, மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மூவரையும் கொல்கத்தா காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், புலனாய்வுத் துறைக்கு வழக்கை மாற்றுவதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரிக்குள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை நினைவூட்டுவதாக தற்போதைய சம்பவம் அமைந்துள்ளது.

Kolkata Police have said that the case of sexual assault of a law college student is being transferred to the Detective Investigation Department.

இதையும் படிக்க : போலீஸ் தாக்கியதில் பலியான அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கியைத் தொடர்ந்து மற்றொரு வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.ப... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் சத்யேந்தர் ஜெயின்!

தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில் விசாரணைக்காகத் தில்லி முன்னாள் அமைச்சரும், ஆத் ஆத்மி தலைவருமான சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத்... மேலும் பார்க்க

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத... மேலும் பார்க்க

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவத... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோ... மேலும் பார்க்க

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க