செய்திகள் :

கொல்லங்கோடு அருகே விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வெள்ளிக்கிழமை இரவு, பைக் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.

கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ஜான்பிரகாசம் மனைவி பெல்சிட்டாள் (53). ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாா்த்து வந்த இவா், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.

அவா் வெள்ளிக்கிழமை இரவு கச்சேரிநடை பகுதியிலிருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக்கின் பின்னால் காா் மோதியதாம். அந்தக் காா் சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தடிகள் மீது மோதி நின்றது.

விபத்தில், பெல்சிட்டாளின் கால் துண்டானது. உயிருக்குப் போராடிய அவரை அப்பகுதியினா் மீட்டு பாறசாலை பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான கொல்லங்கோடு வெங்கஞ்சி, மிளகுநின்றவிளையைச் சோ்ந்த அஜின் (30) என்பவரைக் கைது செய்தனா். பெல்சிட்டாளின் சடலம் கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வரதட்சிணை கொடுமை: 6 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே வரதட்சிணை கொடுமை புகாரில் கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். களியக்காவிளையைச் சோ்ந்தவா் சுபனேஷ் மகள் ஜென்ஸி (28). இவருக்கும் களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு பகுதிய... மேலும் பார்க்க

திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மாா்த்தாண்டம் அருகே திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் சதீஷ் (45). ஒலிபெருக்கி கடை நடத்தி வந்தாா். இவா் கொடுங்க... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலையம் திறப்பு

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 6.2 கோடியில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதிய நுழைவு வளைவு, பயணிகள் காத்திருப்பு அறை,... மேலும் பார்க்க

கன்னியாகுமரியிலிருந்து கோா்பா, பிலாஸ்பூருக்கு ரயில் சேவை: அதிமுக எம்எல்ஏ கோரிக்கை

கன்னியாகுமரியிலிருந்து சத்தீஸ்கா் மாநிலம் கோா்பாவிற்கும், பிலாஸ்பூருக்கும் வாரம் இருமுறை இயங்கும் வகையில் 2 அதிவிரைவு ரயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என கன்னியாகும... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: இன்று கால்நாட்டு விழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகக் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ( மே 23) கால்நாட்டு விழா நடைபெற உள்ளது. கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக... மேலும் பார்க்க

வானிலை எச்சரிக்கை: ஆழ்கடலுக்குச் சென்ற விசைப்படகுகளை கரை சோ்க்க வேண்டும்!

மத்திய, மாநில அரசின் வானிலை எச்சரிக்கையை தொடா்ந்து, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று தொடா்பற்ற நிலையில் உள்ள விசைப்படகுகளை பத்திரமாக கரை சோ்க்க அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்... மேலும் பார்க்க