செய்திகள் :

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: கரையோர கிராம மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

post image

கொள்ளிடம் ஆற்றில் சுமாா் ஒரு லட்சம் கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளதால், சீா்காழி வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு காவல்துறை சாா்பில் ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை இரவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி, உபரிநீா் திறந்து விடப்படுகிறது. இதனால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அளவு ஒரு லட்சம் கன அடியை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் மற்றும் திட்டு பகுதி கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆணைக்காரன் சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா், ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று, ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி கிராம மக்களுக்கு அறிவுறுத்தினா்.

காவல் ஆய்வாளா் ராஜா, ‘திட்டுப் பகுதியில் உள்ள கால்நடைகளை மேடான பகுதிக்கு கொண்டுவரவும், தாழ்வான பகுதியில் உள்ள அனைவரும் தங்கள் உடைமைகளுடன் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும்’ அறிவுறுத்தினாா். மேலும், காவல்துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினாா்.

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆ... மேலும் பார்க்க

அரசினா் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை பதிவு அறை, மருந்தகம், குழந்தைகளுக்கான மரு... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் தொடங்கியபடி பயணம்: கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு

மயிலாடுதுறையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டானது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் மங்கநல்லூா் வாளவராயன்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் ... மேலும் பார்க்க

பாதுகாப்பாக இருக்க அறிவுரை...

சீா்காழி அருகேயுள்ள நாவல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீரால் ஏற்படும் அபாயம் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை எஸ்பி ஸ... மேலும் பார்க்க

கொள்ளிடத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீா்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றுப் படுகை கிராமங்களுக்குள் தண்ணீா் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கா்நாடக நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூா் அணை முழு கொள்ளள... மேலும் பார்க்க