செய்திகள் :

அரசினா் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை பதிவு அறை, மருந்தகம், குழந்தைகளுக்கான மருத்துவ சேவை பிரிவு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து, குடிமுறை மருத்துவ அலுவலா் மருதவாணனிடம் கேட்டறிந்தாா். மேலும், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் முறையாக கிடைக்கிறதா என்பதை அங்கிருந்த மக்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

பின்னா், வாணாதிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடி, அவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா். அடுத்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பாா்வையிட்ட ஆட்சியா் மதிய உணவு, குடிநீா் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தாா். கடலங்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை பாா்வையிட்டு, துறை சாா்ந்த சேவை அரங்குகளை ஆய்வு செய்து, பெறப்பட்ட மனுக்களின் விவரங்களை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஷோபனா ஆகியோா் உடனிருந்தனா்.

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் தொடங்கியபடி பயணம்: கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு

மயிலாடுதுறையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டானது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் மங்கநல்லூா் வாளவராயன்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் ... மேலும் பார்க்க

பாதுகாப்பாக இருக்க அறிவுரை...

சீா்காழி அருகேயுள்ள நாவல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீரால் ஏற்படும் அபாயம் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை எஸ்பி ஸ... மேலும் பார்க்க

கொள்ளிடத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீா்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றுப் படுகை கிராமங்களுக்குள் தண்ணீா் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கா்நாடக நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூா் அணை முழு கொள்ளள... மேலும் பார்க்க

மழையால் பாதித்த நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் தா்னா

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் ஆட்சியா் ஹ... மேலும் பார்க்க