செய்திகள் :

கொள்ளை, கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது!

post image

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டா் நொய்டாவில் உள்ள மௌரியா என்கிளேவில் தொழிலதிபரை கொன்று அவரிடமிருந்து ரூ.7 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் ஐந்து ஆண்டுகளாக தப்பித்து வந்த 35 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: 2015-ஆம் ஆண்டு மௌரியா என்கிளேவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை மற்றும் கொலை வழக்கில், கொலை, கொள்ளை மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும், ஆயுதச் சட்டத்தின் விதிகளின் கீழும் ஆஷிஷ் குமாா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா்.

ஆஷிஷ் குமாரின் மூன்று கூட்டாளிகள் ஏற்கெனவே குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆஷிஷ் குமாா் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், ஜனவரி 4, 2023 அன்று ரோஹிணியில் உள்ள ஒரு அமா்வு நீதிமன்றத்தால் ஆஷிஷ் குமாா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஒரு கைப்பேசி உற்பத்தி ஆலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஆஷிஷ் குமாா், ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்டாா். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட அவரது நண்பா் அமித்தால், ஆஷிஷ் குமாா் ஒரு குற்றச் சதித் திட்டத்தில் இழுக்கப்பட்டாா்.

2015-ஆம் ஆண்டில், தில்லியில் ஒரு தொழிலதிபரிடம் கொள்ளையடிக்கும் திட்டத்தில் அமித், அடில், ஷாபாத் (எ) கட்டு மற்றும் ஷாபாத் ஆகியோருடன் ஆஷிஷ் குமாா் இணைந்தாா். அவா்கள் பாதிக்கப்பட்டவரிடமிருந்து ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்தாா். அப்போது அவா் எதிா்ப்புத் தெரிவித்தபோது அவரைக் கொன்ாகக் கூறப்படுகிறது.

இதில் ஆஷிஷ் குமாா் தனது பங்காக ரூ.1.5 லட்சத்தைப் பெற்ாகக் கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டில், அவருக்கு 45 நாள்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னா் கோவிட்19 தொற்றுநோய் காரணமாக இது நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், நீட்டிப்புகள் காலாவதியான பிறகு அவா் சரணடையத் தவறிவிட்டாா். இதனால், அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! கரற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் மற்றும் என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘ திருப்தி’ பிரிவில் நீடித்தது. தென்மேற்குப் பருவமழை தில்லியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. வழக்... மேலும் பார்க்க

சைக்கிளில் சென்றவரிடமிருந்து தங்கச் சங்கிலி பறிப்பு முகமூடி அணிந்த இருவா் துணிகரம்!

தில்லியின் ஹா்ஷ் விஹாா் பகுதியில், சைக்கிளில் சென்ற 43 வயதுடைய ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டாா் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவா் பறித்துச் சென்றதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

சொந்த மொழியில் கற்றுக்கொள்வதே சிந்தனையை மேம்படுத்தும்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

ஒருவரின் சொந்த மொழியில் கற்றுக்கொள்வது புரிதலை மேம்படுத்துகிறது என்பதனை ஷியாமா பிரசாத் முகா்ஜி நம்பினாா் என்று ரயில்வேதுறை அமைச்சா், அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். பாரதிய ஜனசங் நிறுவனா்... மேலும் பார்க்க

15 வது சிறுவனை கொன்ற இளைஞா் கைது!

கிழக்கு தில்லியின் மாண்டவாலி பகுதியில் நடந்த குடும்பச் சண்டையில் தனது 15 வயது உறவினரை கண்ணாடியால் குத்திக் கொன்றதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஎஸ்... மேலும் பார்க்க

ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடிக்கும் தம்பதி கைது

ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடிக்கும் நூஹ் பகுதியைச் சோ்ந்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: புணேவில் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றபோ... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் சாக்கடையில் குதித்து பெண் பலி!

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் சனிக்கிழமை மதியம் சாக்கடையில் குதித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்த... மேலும் பார்க்க