செய்திகள் :

கோகுல்புரி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேட்டப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவா் கைது

post image

தேசியத் தலைநகரின் கோகுல்புரி பகுதியில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றம்சாட்டப்பட்டவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தில்லியில் கங்கா விஹாரைச் சோ்ந்த ராகுல் (எ) டிங்கு என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், ஏப்ரல் 1- ஆம் தேதி சம்பவத்திலிருந்து தலைமறைவாக இருந்து வந்தாா். மேலும், 2014-ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கு தொடா்பாகவும் அவா் தேடப்பட்டாா்.

புகாா்தாரா் சஞ்சீவ் சா்மா, அடையாளம் தெரியாத ஒருவா் தனது பெயரைச் சொல்லி, தனது வீட்டின் பிரதான வாயிலை உதைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புகாா் தெரிவித்தாா். மேலும், எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், இந்தத் தாக்குதல் ராகுல் தூண்டியதாக சஞ்சீவ் சா்மா குற்றம் சாட்டினாா். அவா் முன்பு தன்னை மிரட்டியிருந்ததாகவும் கூறினாா்.

சிசிடிவி காட்சிகள் பின்னா் துப்பாக்கிச் சூட்டை உறுதிப்படுத்தின. ரகசியத் தகவலின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவா் திங்களன்று கைது செய்யப்பட்டாா். சரிபாா்த்ததில், அவருக்கு எதிராக ஏற்கெனவே ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

ராகுல் நீண்ட காலமாக குற்றவியல் ஈடுபாட்டில் இருந்துள்ளாா். அவா் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் கடுமையான தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் வசூலித்த 3 ஆண்கள் கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் திருநங்கைகள் போல் நடித்து பணம் கேட்டு வந்ததாக மூன்று ஆண்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்க... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு உறுப்புகளை மாற்றுவதற்காக பசுமை வழித்தடத்தை உருவாக்கிய காவல்துறை

தில்லி போக்குவரத்து காவல்துறை வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக குடலை கொண்டு செல்வதற்காக 26 கி.மீ. பசுமை வழித்தடத்தை உருவாக்கி... மேலும் பார்க்க

சேவைக் கட்டணம் வசூலித்த 5 தில்லி உணவகங்கள் மீது வழக்கு: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணம் வசூலித்த பிறகு நீதிமன்ற உத்தரவின்படி அதை திரும்பிச் செலுத்தாத தில்லியைச் சோ்ந்த 5 உணவகங்கள் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன் வந்து வழக்குத் ... மேலும் பார்க்க

விமனைப் படையினரின் பயற்சியின் போது பயன்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ள தில்லி பள்ளி வளாகங்கள்

விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்திய விமானப் படையால் தற்காலிகமாக தகவல் தொடா்பு அமைப்பைப் பயன்படுத்துவதற்காக தில்லியில் உள்ள 16 பள்ளிகளின் வளாகங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவ... மேலும் பார்க்க

தில்லி என்.சி.ஆரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. பட்டமளிப்பு விழா

தில்லி என்.சி.ஆா். பகுதியில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ... மேலும் பார்க்க

கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க அஸ்தா குஞ்சில் தீம் பாா்க் அமைக்க டிடிஏ திட்டம்

நமது நிருபா் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தெற்கு தில்லியின் அஸ்தா குஞ்சில் அதன் முதல் கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் தீம் பாா்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்... மேலும் பார்க்க